கொரோனா கட்டுப்பாட்டால் தேர்வு எழுதாத பிளஸ் 2 மாணவர்களுக்கு மறுதேர்வு.. முதல்வர் அறிவிப்பு
சென்னை: கொரோனா கட்டுப்பாட்டால் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு இன்னொரு நாள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் எல்கேஜி முதல் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

பொதுத் தேர்வு
அதாவது 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி பொதுத் தேர்வு நடைபெறும் என அரசு தெரிவித்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 5 ஆம் வகுப்பு வரை விடுமுறை என அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை என கடந்த 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

கல்வியாளர்கள்
இந்த நிலையில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்ச்சி நிலை குறித்து பெற்றோர் குழப்பமான சூழலில் இருந்தனர். மேலும் மாணவர்களின் நலன் கருதி அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும், இல்லாவிட்டால் அவர்களது முந்தைய தேர்வுகளின் செயல்பாட்டை வைத்து தேர்ச்சி அளிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

அறிவிப்பு
இதனிடையே தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்த நிலையில் 10-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஓரிரு தேர்வுகளே இருந்த நிலையில் அது நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தேதி அறிவிப்பு
அவர் கூறுகையில் தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும். அதுபோல் கொரோனா கட்டுப்பாட்டால் பிளஸ் 2 மாணவர்களுக்கான கடைசி தேர்வில் பங்கேற்க முடியவில்லை என மாணவர்கள் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து அதுபோல் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும். அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் அறிவித்தார். புதுவையிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications