பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை! தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை கடந்த 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, ஒரு முழு கரும்பு, ரூ 1000 ரொக்கம் என பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

அண்மையில் தமிழக அரசு அறிவித்த இரு அறிவிப்புகளில் முக்கியமானது மிக்ஜாம் புயல் நிவாரணமும் பொங்கல் பரிசு தொகுப்பும்தான். இவற்றில் மிக முக்கிய பங்கு ரேஷன் கடை ஊழியர்களுக்கு இருந்தது.
இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கார்டுக்கு 50 பைசா வீதம் அந்த கடையில் 300 கார்டுகள் இருந்தால் அதற்கேற்ப கணக்கு செய்யப்பட்டு தொகை வழங்கப்படும்.
இந்த ஊக்கத்தொகை ரேஷன் கடை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்கான அறிவிப்பை கூட்டுறவுத் துறை வழங்கியிருந்தது.












Click it and Unblock the Notifications