உச்ச நீதிமன்றத்துக்கு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நியமனம்
சென்னை: தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களாக அரிஸ்டாட்டில், குமணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்களாக எம்.யோகேஷ் கன்னா, டி.ஆர்.பி. சிவக்குமார், பி.விநோத் கன்னா இருந்தனர். அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், அவர்களது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்துக்குத் தமிழக அரசின் புதிய வழக்கறிஞர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி உச்ச நீதிமன்றத்துக்குத் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்களாக அரிஸ்டாட்டில், குமணன் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரில் ஒருவர் சிவில் வழக்குகளையும் மற்றொருவர் குற்ற வழக்குகளையும் பார்த்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் திமுக தரப்பில் பல முக்கிய வழக்குகளில் ஆஜராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications