Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாடகை வீட்டை விடுங்க! புது வீடு கட்டுவோருக்கு வீட்டுமனைப்பிரிவு, கட்டிட அனுமதி பற்றி அரசு குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டுமனைப் பிரிவுகள், கட்டடங்களுக்கு அனுமதி பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, இனி ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும் மனைப்பிரிவுகள், கட்டடங்களுக்கு இணையத்தளம் வழி முறையான அனுமதி பெறுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் வெளியாகியிருக்கும் அறிவிப்பு என்ன?

ஊரகப் பகுதிகளில் ஒற்றைச்சாளர முறையில் சுய சான்றை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி (SELF CERTIFICATION) பெறும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட தடைமுறை தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Rental House housing units Tamilnadu Government

சதுர அடிக்கு குறைவான மனைப்பரப்பு

அதன்படி, 2000 சதுர அடிக்கு குறைவான மனைப்பரப்பில் 31000 சதுர அடி வரை தரைத்தளம் அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட 2 குடியிருப்பு வரையுள்ள கட்டிடங்களுக்கு https://onlineppa.in.gov.in என்ற வெப்சைட்டில் பொதுமக்கள் நேரடியாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்நிலையில், வீட்டுமனைப் பிரிவுகள், கட்டடங்களுக்கு அனுமதி பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் புதிய வீடு கட்டுபவர்கள் அனுமதி பெறுவது தொடர்பான அரசு புதிய விதிமுறைகளை விதித்துள்ளது.. இதனை அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

மனைப்பிரிவுகள்

அந்தவகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில், "ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும் மனைப்பிரிவுகள், கட்டடங்களுக்கு இணையத்தளம் வழி முறையான அனுமதி பெறுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மனைப்பிரிவுகள், கட்டடங்களுக்கு அனுமதி பெறும் நடைமுறையை எளிதாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஏனெனில், இதன் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத் தொகை வருவாய் கிராம ஊராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.. இதற்காக கடந்த 2023ம் ஆண்டு புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. உரிய கட்டணத்தைச் செலுத்திய பின் உரிய ஆவணங்களை அளித்தால் ஒற்றைச் சாளர முறையில் உரிய அனுமதிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், "மனைப்பிரிவு, கட்டடங்களுக்கான அனுமதியை இனி இணைய வழியில் மட்டுமே விண்ணப்பம் செய்து அனுமதி பெறவேண்டும்" என அறிவித்துள்ளது.

சுயசான்று நடைமுறையின் நோக்கங்கள் ;

இதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட அணைத்து கிராம ஊராட்சிகளிலும் SELF CERTIFICATION நடைமுறைப்படுத்த வேண்டுமென என்று அம்மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1. குடியிருப்பு கட்டிடத் திட்ட அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் நடைமுறையை எளிமைப்படுத்துதல்.
2. கட்டிடத் திட்ட அனுமதியைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்த்தல்
3. கட்டிடத் திட்ட அனுமதிக்கான கட்டணத்தைச் செலுத்துவதை எளிதாக்குதல்,
4. ஒப்புதலுக்குப் பிந்தைய ஆய்வுகள் மேற்கொள்ளுதல்
5. கட்டிடத் திட்ட அனுமதியைப் பெறுவதில் இடைத்தரகர்களைத் தவிர்த்தல் மற்றும் மக்கள் நேரடியாக விண்ணப்பித்து சுய சான்று மூலம் அனுமதி பெறுதல்,

இந்த 5 ஆவணங்கள் முக்கியம்

1. பதிவு செய்யப்பட்ட கட்டிட வல்லுநரால் கையொப்பமிடப்பட்ட திட்ட வரைபடம் (PDF வடிவத்தில்)
2. விண்ணப்பதாரர் பெயரில் பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம் (Registered Sale Deed in favour of the applicant)
3. விண்ணப்பதாரரின் பெயரில் பட்டா in favour of thearylicant)
4. அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு ஆவண (Approval Layout Document)
5. தள புகைப்படம். (Site Photograph)

சுய சான்று கட்டிட அனுமதி வழங்கிடும் பொருட்டு ஊராட்சிகளை வகைப்பாடு செய்து கட்டணம் நிர்ணயம் செய்யப்படுள்ளது. மேற்படி திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட ஊரகப் பகுதிகளில் web portal : https://onlineppa.in.gov.in என்ற இணையதளம் முகவரியில் மக்கள் நேரடியாக விண்ணப்பித்து ஒற்றைச்சாளர முறையில் சுய சான்றின் அடிப்படையில் கட்டிட அனுமதி SELF CERTIFICATION) பெற்றுகொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+