ஓகே சொன்ன ஆளுநர்.. தொழிலாளர்களே! இனி இதெல்லாம் உங்க உரிமை - வெளியான அரசாணை.. குடிநீர் டூ ரெஸ்ட் ரூம்
சென்னை: தொழிலாளர் நலனுக்கான பணியிடத்தில் இருக்க வேண்டிய வசதிகள் தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அது அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "தமிழ்நாடு மாநிலச் சட்டப்பேரவையின் பின்வரும் சட்டமானது 2023 ஆம் ஆண்டு மே திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 20/2023. 1947ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1. (1) இந்தச் சட்டம், 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் குறுந்தலைப்பு (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, அரசு, அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2. தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் 22-A 22-B, 22-C, ஆம் பிரிவுக்கு பின்பு, பின்வரும் பிரிவுகளானவை உட்புகுத்தப்படுதல் வேண்டும். அதாவது:-
"22-B. குடிநீர் - பணியமர்த்துநர் ஒவ்வொருவரும், கடை அல்லது நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து நபர்களுக்கும், வசதியாக அமைந்துள்ள பொருத்தமான இடங்களில், போதிய அளவு சுகாதாரமான குடிநீரை வழங்குவதற்கும் பராமரிப்பதற்கும் பயனுள்ள ஏற்பாட்டினைச் செய்தல் வேண்டும்.
22-C. கழிப்பிடம் மற்றும் சிறுநீர் கழிப்பிடம்.- பணியமர்த்துநர் ஒவ்வொருவரும், வகுத்துரைக்கப்படலாகிறவாறு, போதிய எண்ணிக்கையில் கழிப்பிடம் மற்றும் சிறுநீர்க் கழிப்பிடங்களை ஏற்பாடு செய்து தருதல் வேண்டும். அவை பணிபுரியும் நபர்களுக்கு வேலை நேரத்தின் அனைத்து நோங்களிலும், அணுகக்கூடியவாறு மிகவும் வசதியானதாக அமைந்திருத்தல் வேண்டும்.
22-D. ஓய்வறை மற்றும் உணவறை. - (1) பணியமர்த்துநர் ஒவ்வொருவரும், பணிபுரியும் நபர்களுக்காக, குடிநீர் வசதியுடன் கூடிய போதிய மற்றும் பயனுள்ள ஓய்வறை மற்றும் உணவறையினை ஏற்பாடு செய்து தருதல் வேண்டும்.
(2) ஓய்வறை மற்றும் உணவறையானது, போதிய காற்றோட்டத்துடனும் வெளிச்சத்துடனும் இருத்தல் வேண்டும் மற்றும் அவை சுத்தமாகவும் சீரொழுங்காகவும் பராமரிக்கப்படுதல் வேண்டும்.
(3) ஓய்வறை மற்றும் உணவறையானது, போதிய நாற்காலிகள் அல்லது சாய்வு இருக்கைகளுடன் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
22-E. முதலுதவி.- பணியமர்த்துநர் பணியமர்த்துதர் ஒவ்வொருவரும், வகுத்துரைக்கப்படலாகிறவாறான முதலுதவி வசதிகளை பணியுரியும் இடத்தில், ஏற்பாடு செய்து தருதல் வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications