தமிழக அரசின் புதிய விண்வெளி கொள்கை! ஸ்பேஸ் பே ஆகும் 4 மாவட்டங்கள்! வெளியானது முக்கிய அறிவிப்பு
சென்னை: விண்வெளித் துறையில் புதுமைகளை உருவாக்கவும் முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு விண்வெளிக் கொள்கை 2024 வெளியாகியுள்ளது. மாநிலத்தில் விண்வெளித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவும் வகையில் வழிமுறைகள் மற்றும் தொலைநோக்கு திட்டங்கள் இந்த கொள்கையில் வகுக்கப்படும்.
தமிழ்நாடு சட்டசப கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. தொழில் மற்றும் முதலீட்டுத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது தமிழ்நாடு தானியங்கி மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, கனரக இயந்திரங்கள், தகவல் தொழில்நுட்பம், மின்னணு வன்பொருள் உள்ளிட்ட துறைகளில் சிறந்த வளர்ச்சி பெற்று தமிழ்நாடு சிறந்த தொழில்மயமான மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
தற்போது வானூர்தி மற்றும் பாதுகாப்புத் துறையில் பெரும் முதலீடுகளை ஈர்த்து வருவதன் தொடர்ச்சியாக மேலும் இந்த துறை சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களை ஈர்த்து அதிக அளவிலான முதலீடுகளை பெறும் நோக்கில் தமிழக விண்வெளி தொழில் கொள்கை வெளியிடப்படும்.
மாநிலத்தில் விண்வெளித் தொழில்நுட்பு வளர்ச்சிக்கு உதவும் வகையில் வழிமுறைகள் மற்றும் தொலைநோக்கு திட்டங்கள் இந்த கொள்கையில் வகுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அந்த வகையில் புதிய கொள்கையின் கீழ் குலசேகரபட்டினத்தை சுற்றியுள்ள மதுரை, விருதுநகர் , தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை ஸ்பேஸ் பே ஆக ஊக்குவித்து வளர்ச்சியை விரைவுப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் வளர்ச்சியை விரைவுப்படுத்த நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. விண்வெளித் துறையில் அதிகரிக்கும் வளர்ச்சிகள், சீர்திருத்தங்கள், முதலீடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விண்வெளி கொள்கையை தமிழக அரசு அறிமுகம் செய்கிறது.
வலுவன தொழில்துறை, உள்கட்டமைப்பு, தொழிலம்நுட்ப நிபுணத்துவம் உள்ளிட்டவை முழுமையாக பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. விண்வெளிக் கொள்கை தொடர்பாக தொழில்துறையினர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications