ஆக்ஸிஜன் 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே சிகிச்சை- அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
சென்னை: ஆக்ஸிஜன் 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை தர வேண்டும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு சுகாதாரத் துறை சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொரோனா உறுதி செய்யப்பட்டு ஆக்ஸிஜன் அளவு 94 க்கு கீழ் இருப்போர் மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது.
அறிகுறிகளுடன் ஆக்ஸிஜன் அளவு 94 க்கு கீழ் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆக்ஸிஜன் அளவு 90 முதல் 94-க்குள் இருப்பவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம், கொரோனா மையங்களில் சிகிச்சை பெறலாம்.
தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 90-க்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா மருத்துவமனைகளில் சிகிச்சை தர வேண்டும். தனிமையில் இருப்பவர்கள் உள்பட அனைத்து கொரோனா நோயாளிகளும் குப்புற கவிழ்ந்து படுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா நோயாளிகளை 3 வகைகளாக பிரித்து சிகிச்சையை தொடர மருத்துவத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.