Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்கிறதா? revised fare குறித்து தமிழக அரசு சொன்னது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் 12 வாரங்களில் மாற்றியமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பெட்ரோல் , டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்குமாறு 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Tamilnadu government says that it will revise auto fares within 12 weeks

இதன் அடிப்படையில் ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க உத்தரவிடுமாறு கோரி ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைப்பது தொடர்பாக தொழிற்சங்கங்கள், டிரைவர்கள், நுகர்வோர் அமைப்புகளிடம் கருத்துகளைப் பெறுவதற்காக போக்குவரத்துத் துறை இணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவானது ஆட்டோ கட்டணங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக அரசுக்கு வழங்கிய பரிந்துரை பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பாக 12 வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. இதை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர். ஆனால் ஆட்டோ கட்டணம் காரணமாக பாதிக்கப்படுவோர் நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+