சல்லி சல்லியா நொறுக்கிட்டாரே.. தலைமை ஆசிரியர் பேஸ்புக் பதிவு! சாதி சான்றிதழை ஒழித்தால் சாதி ஒழியுமா?
சென்னை: சாதி சான்றிதழ் காரணமாகவே சாதி இருப்பதாகவும், பள்ளிகளில் இடஒதுக்கீட்டுக்காக சாதி கேட்பதால் மாணவர்கள் மத்தியில் சாதி பரவுவதாக பலர் கூறி வரும் நிலையில், அனைத்தையும் சுக்கு நூறாக உடைத்து உள்ளார் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர்.
திருச்சி மாவட்டம் நாகமங்கலம் அரசு பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து வருபவர் ஜெயராஜ் முத்துவேல். இவர் பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ள பதிவில், "நீதி அரசர் சந்துரு தலைமையிலான, பள்ளிகளில் சாதிய வேறுபாடுகளை களைவதற்கு வேண்டிய வழிகாட்டுதல்களை வழங்க அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு மக்களிடமிருந்து ஆலோசனைகளை வரவேற்றுள்ளது.

இந்த செய்தியை மின்னஞ்சல் முகவரியோடு எனது வாட்ஸ் அப் நிலைத்தகவலாக வைத்திருந்தேன் அதற்கு பதில் அளித்திருந்த ஒரு தம்பி ஒரு அபாரமான யோசனையை கூறியிருந்தார் அவரது யோசனையையும் அதற்கு என்னுடைய பதிலும் கீழே கொடுத்துள்ளேன்.
"பள்ளி சான்றிதழில் குறிப்பிடக் கூறுவதே அரசு தான் அதைத் தடுத்தால் யார் எந்த சாதி என்பதே தெரியாமல் போகும் அனைவரும் ஒன்றாக இருப்பர்."
சிறுபிள்ளைத்தனமான சிந்தனை!!
சாதிச் சான்றை வைத்தா சாதியை கண்டுபிடிக்கிறார்கள்?!!
எந்த ஊர்?!
எந்த தெரு?!
அந்த ஊர்ல அவர் உனக்கு என்ன முறை ஆவுது?!
வடக்கே சாதியை கண்டுபிடிப்பது ரொம்ப சிம்பிள், சர் நேம் போதும்!!
வகுப்புவாரியாக அதிகாரம் பகிர்ந்தளிக்கவும் படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகளை சாதி வாரியான மக்கள்தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ற அளவில் வழங்கிடவும் நிச்சயமாக ஜாதி சான்றிதழ் அவசியம் மேலும் ஜாதி சான்றிதழ் ஒன்றை மட்டுமே இங்கே அடிப்படையாக வைத்து யாரும் சாதியை மதிப்பிடுவதில்லை ஏன் திருமணத்தில் கூட யாரும் சாதி சான்றிதழ் கேட்பதில்லை!!
ஒருவரை சாதி ரீதியாக அடையாளப்படுத்த சாதி சான்றிதழ் என்பது நிச்சயமாக அவசியமில்லை!! மாறாக ஒருவர் தனக்கான உரிமையும் வாய்ப்பையும் பெற்றிட ஜாதி சான்றிதழ் நிச்சயம் அவசியமானது.
வகுப்பு வாரியாக விகிதாச்சார அடிப்படையிலான அதிகாரமும் வேலை வாய்ப்புகளும் பகிர்ந்து அளிக்கப்படும் வரை சாதி சான்றிதழும் இட ஒதுக்கீடும் நிச்சயம் அவசியம்!! ஜாதி சான்றிதழை கிழித்துப் போட்டால் ஜாதி ஒழிந்து விடும் என்பது தினமலர் காரன் கிளப்பிவிட்ட சிந்தனை!!" என்று குறிப்பிட்டு உள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆகஸ்டு மாதம் தலித் மாணவனை வீடு புகுந்த சக மாணவர்களே சாதி வெறியால் கொலை வெறியுடன் வெட்டிய சம்பவம் பபரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பள்ளிகள் சாதி வேறுபாடுகளை ஒழிக்கும் வழிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஆணையம் அமைத்தது.
இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், "ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் காவல் துறையினர், கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகையாளர்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைப் பெற்று அரசுக்கு 6 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள கட்டிடத்தில் இந்த ஆணையம் செயல்படும். ஆக்கப்பூர்வமான முறையில் சாதி, இன பேதமற்ற சமூகத்தை உருவாக்க, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து, அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் குறைகளைத் தெரிவிக்க ஏதுவான குறைதீர் அமைப்பை உருவாக்க, தக்க வழிகாட்டுதல்களை அரசுக்கு வழங்க வேண்டும்.
இதற்காக கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக சிந்தனையாளர்கள், காவல் துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், குழந்தைகள் நலக் குழுவினர், சிறார் நீதி வாரியம், சாதி அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டு தண்டனை பெற்ற சிறுவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி, தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை அரசுக்கு அளிக்க வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
பாகிஸ்தான் செல்கிறதோ இல்லையோ.. இந்திய அணியால் அரையிறுதிக்கு வர முடியாது.. சீண்டும் முகமது ஆமீர்! -
மதுரை தவெக நிர்வாகி சர்மிளா.. நிலத்தை அடகு வைத்து கிடைத்த ரூ.16 லட்சம்.. மொத்தமாக காலி -
வேலூரில் 3 லட்சம்.. இப்போது இந்த பாம்பின் மதிப்பு 50 லட்சம்.. வனத்துறையையே ஆடிப்போக வைத்த ட்விஸ்ட் -
34 தொகுதிகள்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு.. பியூஷ் கோயலை சந்திக்கும் எஸ்பி வேலுமணி! -
ஓ பன்னீசெல்வத்திற்கு திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவி? இரண்டு பெரிய ஆஃபர் தந்த ஸ்டாலின்? -
சங்கீதா கொடுத்த விவாகரத்து வழக்கு.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த மகன் ஜோசன்.. புது பஞ்சாயத்து -
சொத்து வைத்திருப்பவர்களுக்கு செம ட்விஸ்ட்.. டவுன் சர்வே ஆவணம் இல்லையெனில் வீடு கட்ட அனுமதி மறுப்பு -
Viruchigam: விருச்சிக ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. நல்ல நேரம் ஆரம்பம் -
1 ராஜ்ய சபா, 23 தொகுதிகள்.. காங்கிரஸ்க்கு மார்ச் 3 வரை கெடு.. தொகுதி பங்கீடு பேச்சில் நடந்தது என்ன? -
விஜய் சங்கீதா பிரச்சனை, இடையே வந்த மாதம்பட்டி ரங்கராஜன் மனைவி ஸ்ருதி! நடிகைக்கு அட்டாக் போஸ்ட் -
ADMK: வெல்லமண்டி நடராஜனை தொடர்ந்து! அதிமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி -
புர்ஜ் கலீஃபாவை தாக்கிய ஈரான்.. உலகின் மிக உயரமான கட்டிடத்தில் கிளம்பிய புகை! மக்கள் வெளியேற்றம்












Click it and Unblock the Notifications