உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!
சென்னையிலும் தமிழகத்தின் பிறபகுதிகளிலும் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
Recommended Video

சென்னை: சென்னையிலும் தமிழகத்தின் பிறபகுதிகளிலும் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
கடந்த மாதம் வீசிய கஜா புயல் தமிழகத்தை மொத்தமாக சூறையாடியது. இதனால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

இந்த நிலையில் தற்போது தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
நாளை மதியத்திற்குள் இது வலுவடைய வாய்ப்பை இருப்பதாக தகவல்கள் வருகிறது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நேற்றே தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது. நாளையில் இருந்து டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications