சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
தமிழகம், புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யும் என சொல்லப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது டெல்டா மாவட்டங்கள்தான். கஜா புயல் கடந்தும்கூட அந்த மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மழை காரணமாக நிவாரண பணிகளை கூட மேற்கொள்ள முடியாமல் இடைஞ்சல் ஆகிவிடுகிறது.
தற்போது வங்கக்கடலில் உருவாகி உள்ள தாழ்வு பகுதியினால் சென்னையில் நேற்றே மழை ஆரம்பித்து விட்டது. ராயப்பேட்டை, மயிலாப்பூர், சேப்பாக்கம், திருவான்மியூர், மீனம்பாக்கம் வடபழனி, அசோக் நகர், கோயம்பேடு, தாம்பரம், பெருங்குடி, வில்லிவாக்கம், உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. கூடவே பலமான காற்றும் அடித்தது. ஆனால் இன்றைக்கு கூட நல்ல மழை பெய்யும் என சொல்லப்படுகிறது.

அடுத்த புயல்?
இதற்கு காரணம் வங்க கடலில் நிலைகொண்டிருக்கும் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிதான். கஜா புயல் 15-ம் தேதி இரவு கரையை கடந்த உடனேயே அடுத்த புயல் வரப்போகிறது என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்திருந்தது. அதன்படியே தென்மேற்கு வங்கக்கடல் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

புயல் கிடையாது
இது இன்னும் 24 மணி நேரத்துக்கு அதே இடத்தில்தான் இருக்குமாம். பிறகு நாளைதான் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுமாம். ஆனால் இது புயலாக மாற வாய்ப்பில்லையாம். காற்றழுத்த தாழ்வு பகுதியிலிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது. அப்படி மாறும்பட்சத்தில், கரையை கடந்து செல்லும்போது, தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்.

10 மாவட்டங்கள்
குறிப்பாக தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால், புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று சொல்லப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்துக்கு பெரும்பாலும் மழைதான். எனவே தென்மேற்கு வங்ககடல் பகுதியில் இன்று யாரும் மீன்பிடிக்க போக வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளார்கள்.

பாதுகாப்பு அவசியம்
புயல் வரப்போவதில்லை என்று சொல்லி விட்டாலும், இரு மாநிலங்களிலும் பேய் மழை கொட்ட போகிறது என்று அறிவித்து விட்டதால் இரு மாநில மக்களும் அதற்கு தயாராக இருந்து பாதுகாப்போடு எதிர்கொள்வது அவசியமாகிறது.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications