தமிழகத்தில் இன்று 34867 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 404 பேர் பலி.. கோவையில் நிலைமை மோசம்!
சென்னை: தமிழகத்தில் இன்று 34867 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்கத்தில் கடந்த 15 நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் மற்ற மாநிலங்களில் கொரோனா கேஸ்கள் உச்சத்தை கடந்துள்ள நிலையில், தமிழகத்தில் இப்போதுதான் கேஸ்கள் உச்சத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றன.
தினசரி கேஸ்கள் தமிழகத்தில் சராசரியாக 34 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. தமிழகத்தில்தான் கடந்த ஒரு வாரமாக தினசரி கேஸ்கள் இந்தியாவிலேயே அதிகமாக பதிவாகி வருகிறது.

எத்தனை
தமிழகத்தில் இன்று 34867 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 301580 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 1877211 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா காரணமாக 404 பேர் பலியாகி உள்ளனர்.

பலி
தமிழகத்தில் இதுவரை 20872 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இன்று 27026 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 1554759 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர்.

டெஸ்ட்
தமிழகத்தில் இன்று 168194 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 159185 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் இதுவரை 25913847 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது . சென்னையில் இன்று 4985 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது.

சென்னை
48151 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். தமிழகத்தில் கோவையில் நிலைமை மோசமாகி வருகிறது. கோவையில் 4277 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. கோவையில் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருகிறது. 33325 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். செங்கல்பட்டில் 1899 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 16257 பேர் செங்கல்பட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications