தமிழகத்தில் இன்று.. இதுவரை இல்லாத அளவு உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு.. கூடவே ஒரு நல்ல செய்தி இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக மேலும் 2865 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 8வது நாளாக 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது, தினசரி பாதிப்பு எண்ணிக்கை.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1654 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக இன்று மாலை சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதை பாருங்கள்:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில், இன்று 2865 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு

மொத்த பாதிப்பு

தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,468. இன்று 29,655 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 9 லட்சத்து 30 ஆயிரத்து 367 பேருக்கு இதுவரை பரிசோதனைகள் நடந்துள்ளன.

உயிரிழப்பு

உயிரிழப்பு

இன்று, கொரோனாவால் 33 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 866 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 2424 என்ற அளவுக்கு உள்ளனர்.

டிஸ்சார்ஜ் நல்ல சேதி

டிஸ்சார்ஜ் நல்ல சேதி

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது, கெட்ட செய்தி என்றபோதிலும், இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 2424 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இது நல்ல செய்தியாகும். முழுமையாக குணமடைந்துதான் இவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

பரிசோதனைகள் அதிகரிப்பு

பரிசோதனைகள் அதிகரிப்பு

இன்று, 33 பேர் உயிரிழந்த நிலையில், அதில் 8 பேர் தனியார் மருத்துவமனையிலும், 25 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இன்று பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்கள் எண்ணிக்கை 29,655 ஆகும். பரிசோதனை எண்ணிக்கை 2 நாட்களுக்கு பிறகு, மீண்டும் அதிகரித்துள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+