Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று 4,389 பேருக்கு கொரோனா பாதிப்பு- 5,245 பேர் டிஸ்சார்ஜ்; 57 பேர் உயிரிழப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4, 389 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 5,245 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவால் இன்று மட்டும் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் இன்று 4,389 பேருக்கு கொரோனா உறுதியானது. கடந்த ஒன்றரை மாதங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 5,000க்கும் கீழே 5-வது நாளாக தொடர்கிறது,

மொத்தம் 6.79 லட்சம் பேருக்கு பாதிப்பு

மொத்தம் 6.79 லட்சம் பேருக்கு பாதிப்பு

இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,79,191 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 57 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,529 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

5,245 பேர் டிஸ்சார்ஜ்

5,245 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 5,245 பேர் இன்று மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மொத்த எண்ணிக்கை 6,27,703

40,959 ஆக்டிவ் கேஸ்கள்

40,959 ஆக்டிவ் கேஸ்கள்

தமிழகத்தில் மொத்தம் 40,959 பேர்தான் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை (ஆக்டிவ் கேஸ்கள்) பெற்று வருகின்றனர். மாவட்டங்களில் சென்னையில் இன்று 1140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

மாவட்டங்களில்..

மாவட்டங்களில்..

கோவையில் 387 பேருக்கும் சேலத்தில் 244 பேருக்கும் கொரோனா உறுதியானது. மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 15 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா மொத்த மரணங்கள் எண்ணிக்கை 13289 ஆக அதிகரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+