மறுபடியுமா? வங்கக் கடலில் அடுத்த வாரமே புயல் சின்னம் உருவாக வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை: வங்கக்கடலில் அடுத்த வாரம் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டே வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின் தமிழ்நாட்டில் புயல் எதுவும் தாக்கவில்லை.
வங்கக்கடலில் உருவான தாழ்வு பகுதிகள் எதுவும் புயலாக வலிமை அடையவில்லை. ஒரு தாழ்வு பகுதி சென்னை அருகே குறைந்த தாழ்வு பகுதியாக கரையை கடந்தது.

தாழ்வு மண்டலம்
அந்தமான் கடலில் உருவான இன்னொரு தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் காரைக்கால் ஸ்ரீஹரிகோட்டா இடையே சென்னை அருகே கரையை கடந்தது. இந்த நிலையில்தான் வங்கக்கடலில் இலங்கை அருகே புதிய தாழ்வு பகுதி உருவாவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் புதிய தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவாகவில்லை.

மழை
மாறாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியே ஒரே இடத்தில் நிலை கொண்டு கடலோர மாவட்டங்களில் வங்கக்கடல் அருகே மிக கனமழையை கொடுத்தது. இதன் காரணமாக தற்போது சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் தீவிரமாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடல்
இந்த நிலையில்தான் வங்கக்கடலில் அடுத்த வாரம் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது அங்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாகவும். இது வடக்கில் நகரும் வாய்ப்புகள் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

வடமேற்கு
இதனால் ஆந்திர பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். இது ஒருவேளை வடமேற்கு திசையில் நகர்ந்தால் தமிழ்நாட்டிலும் கனமழையை கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது முழுமையாக புயலாக மாறுமா, எவ்வளவு வலுவாக இருக்கும் என்பதெல்லாம் இப்போது கணிக்க முடியாது. புயல் சின்னம் உருவாவதற்கான சூழ்நிலைகள் மட்டும் தற்போது நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications