பெரும் தண்ணீர் பஞ்சத்தை நோக்கி செல்கிறது சென்னை- தமிழ்நாடு வெதர்மேன் கவலை
சென்னை: பெரும் தண்ணீர் பஞ்சத்தை நோக்கி சென்னை செல்கிறது என தமிழ்நாடு வெதர்மேன் கவலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு பயனளிக்கும் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கியது. மழை பெய்தது.
கஜா புயல் உருவானது. அந்த புயலால் டெல்டா மாவட்டங்களுக்கு மழை பெய்தது. எனினும் சென்னைக்கு அந்த அளவுக்கு மழை கை கொடுக்கவில்லை.

சமாளிப்பது எப்படி
சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகள் ஏதும் நிரம்பவில்லை. இதனால் வரும் கோடை காலத்தை சென்னை மக்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொறுமை
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் டிசம்பர் மாதம் மத்தியில் நிச்சயம் தமிழகத்துக்கு மழை வரும். அதற்கு இன்னும் 7 நாட்கள் உள்ளன. அதுவரை பொறுமையாக இருங்கள்.

பயன் தமிழகத்துக்கே
பர்மா, ஒடிஸா, ஆந்திரா அருகே மழை சென்றாலும் இறுதியில் தமிழகத்துக்கே பலனை தரும். ஒரே ஒரு கேள்விதான். தமிழகத்துக்கு வரும் மழை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் உருவாகுமா, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வருமா இல்லை புயலால் மழை வருமா என்பதுதான் சந்தேகம்.

தண்ணீர் பஞ்சம்
இன்னொன்று அந்த மழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பலனை அளிக்குமா இல்லை டெல்டா மாவட்டங்களுக்கு பலனை தருமா என்பதும் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நான் அடிக்கடி சொல்வது போல் சென்னையில் தவறவிட்ட மழைக்கு எதையும் செய்ய முடியாது. சென்னை மக்கள் பெரும் தண்ணீர் பஞ்சத்தை நோக்கி செல்கிறார்கள்.

மழை இருக்காது
அது வரை பொறுமையாக இருந்து சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை பார்த்து மகிழ்ச்சியாக இருங்கள். டிசம்பர் 14, 15-ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை இருக்காது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications