கத்திரி வெயிலை குளிர்விக்க வரும் மழை.. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கொட்டித் தீர்க்க போகும் மழை
சென்னை: வெப்ப சலனம் காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்னரே மாநிலம் முழுவதும் வெப்பம் கடுமையாக இருந்தது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் கோடை வெயில் சதமடித்தது.
அஸ்ஸாம் புதிய முதல்வராக தேர்வு- பாஜக மேலிடத்துடன் மல்லுகட்டி சாதித்தேவிட்டார் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா!
இந்த நிலையில், கடந்த மே 4ஆம் தேதி தான், தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது. வரும் மே 29ஆம் தேதி வரை அதாவது 25 நாட்கள் இருக்கும் இந்த அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இருக்கும்.
ஐந்து நாட்களுக்கு மழை
இந்தக் காலகட்டத்தில் வெயில் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், வெப்பச்சலனம்காரணமாகத் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பொய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை
அதேபோல சென்னையை பொறுத்தலவைர வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேலும், கர்நாடகா மற்றும் கேரளா கடலோர பகுதிகளிலும் லட்சத்தீவு பகுதிகளிலும் சூறாவளிக் காற்று 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்வதைத் தவிர்க்குமாறும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வெப்பநிலை
வரும் மே 11 முதல் 13ஆம் தேதி வரை தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தற்போது இருக்கும் வெப்பநிலையைவிட 2 முதல் 3 டிகிரி செல்சிஸ் வரை வெப்ப நிலை உயரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது