சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தென்மேற்கு பருவக்காற்று வருகிறது.. தமிழகத்தில் இன்றும் செம மழை இருக்கும்.. எங்கெல்லாம் பெய்யும்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இருக்கும் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    Weather Update : தென்மேற்கு பருவக்காற்று வருகிறது..எங்கெல்லாம் பெய்யும்?

    மழை காலம் தொடங்கிய நிலையில் கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் காவிரியில் நீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது.

    தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மிக தீவிரமாக வீச தொடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் மழை மேகங்கள் சூழ்ந்துள்ளது.

    இரவு முழுக்க வெளுத்தெடுத்த மழை.. சென்னையில் செம வானிலை.. எங்கெல்லாம் மழை பெய்தது!? இரவு முழுக்க வெளுத்தெடுத்த மழை.. சென்னையில் செம வானிலை.. எங்கெல்லாம் மழை பெய்தது!?

    தமிழகம் நிலை

    தமிழகம் நிலை

    இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் தீவிரமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் இருக்கும் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும். தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் .

    காரணம் என்ன

    காரணம் என்ன

    தென்மேற்கு பருவக்காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்யும். தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மழை அருகே இருக்கும் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் இதனால் நன்றாக மழை பெய்யும். மேலும் தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவையில் சாரல் மழை பெய்யும்.

    கடல் எப்படி

    கடல் எப்படி

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். காற்று வேகமாக வீசும். அதிகமாக 50 கிமீ வேகத்தில் கூட காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்கள் அந்த பகுதியில் மட்டும் மீன் பிடிக்க வேண்டாம். வேறு இடங்களில் மீனவர்கள் கவனமாக மீன் பிடிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை எப்படி

    சென்னை எப்படி

    சென்னையில் இரவு முழுக்க பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னையின் வானிலை திடீர் என்று குளிச்சியாக மாறியுள்ளது.சென்னையின் முக்கிய பகுதிகளில் அதிகாலை வரை கனமழை பெய்தது. சென்னையில் இன்றும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடுமையான தென்மேற்கு பருவ காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையிலும் மழை பெய்யும் என்கிறார்கள்.

    English summary
    Tamilnadu will see in 8 districts today and tomorrow says weather department.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X