அடுத்த 48 மணி நேரம்.. தீவிர காற்று வீசும்.. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய போகிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாகவும், வானிலை மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
அதேபோல் இன்னொரு பக்கம் கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் தீவிரமாக கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் இடுக்கி, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களில் தீவிரமாக மழை பெய்து வருகிறது.

சென்னை
நேற்று தமிழகத்தில் சென்னையிலும் மிக தீவிரமாக கனமழை பெய்தது. நேற்று இரவு வரலாறு காணாத அளவிற்கு சென்னையில் மழை பெய்தது. இந்த வார தொடக்கத்தில் இருந்தே சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய போகிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

எங்கு எல்லாம்
வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சேலம், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வேறு எங்கு எய்யும்
அதேபோல் இன்னொரு பக்கம் இந்திய பெருங்கடல் மற்றும் வங்க கடல் கொந்தளிப்புடன் காண வாய்க்காப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. கடல் அலை சுமார் 3.5 மீட்டர் உயர் வரை வாய்ப்புள்ளது. குமரி அருகே கடல் கொந்தளிப்புடன் காண வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில்
சென்னையில் நாளை மாலைக்கு பிறகு, இன்று நள்ளிரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற நேரங்களில் அதிக வெயில் இல்லாமல், மேக மூட்டத்துடன் வானம் காணப்படும். அதேபோல் கடலோர மாவட்டங்களில் தீவிர காற்று வீச வாய்ப்புள்ளது. 40-50 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. கடலோர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் காற்று வீசும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications