அப்பப்பா.. கோழியை வெயிலில் காண்பித்தால் தந்தூரிதான்.. தகிக்கும் ஆம்பூர்.. அரக்கோணத்தில் உச்சபட்சம்
சென்னை: தமிழகத்தில் நிறைய இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. இந்த வெப்பநிலை அதிகரிப்பால் மக்கள் வீட்டுக்குள்ளேயே புழுக்கத்தில் அவதிப்பட்டனர்.
தமிழகத்தில் கடந்த மே 4 ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இது வரும் 28 வரை இருக்கும். இந்த காலகட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வெயில் கொடுமை கொரோனாவை விட மோசமாக இருக்கும்.
இந்த காலகட்டங்களில் வழக்கமாக இளநீர் கடைகள், தர்ப்பூசணி கடைகள், பழச்சாறு கடைகள், ஐஸ்கிரீம் பார்லர்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்துவர்.

கடைகள் இல்லை
இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பெரும்பாலானோர் வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளனர். அது போல் மேற்கண்ட ஜூஸ் கடைகள், ஐஸ்கிரீம் கடைகளும் திறக்கப்படவில்லை. சாலையோரக் கடைகளும் தென்படவில்லை.

பணம் இல்லை
ஊரடங்கில் ஓரளவு தளர்வுகள் கொடுத்தாலும் பெரும்பாலானோர் வொர்க் பிரம் ஹோம் முறையில் பணியாற்றி வருகிறார்கள். வெகு சிலரே வெளியே செல்கின்றனர். அவர்களுக்கு ஊதியம் என்பது கொடுக்கப்படாமல் உள்ளதால் ஜூஸ் கடைகளை தேடி செல்லவும் முடியவில்லை. மேலும் ஜூஸ் கடைக்காரர்களுக்கும் சரக்குகளை வாங்க போதிய பணம் இல்லை.

அரக்கோணம்
இவை என்னதான் இருந்தாலும் கத்திரி வெயில் ஏற்படுவது கொரோனாவால் மாற்ற முடியாது. தற்போது தமிழகத்தில் முக்கிய இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. தற்போது சென்னையில் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அது போல் கடலூரில் 100.4 டிகிரி பாரன்ஹீட்டும், ஆம்பூரில் 104 டிகிரியும் அரக்கோணத்தில் 107 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது.
Recommended Video

நெல்லை
ஈரோடு, குடியாத்தம், சேலம் ஆகிய இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. நெல்லை, திருச்சியில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் சதம் அடித்துள்ளது. இதனால் வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. கொரோனாவால் மாலை நேரத்தில் இயற்கை காற்று வாங்குவோரும் வெளியே வராத நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications