பொங்கல் பரிசு, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.. சட்டசபை கூட்டம் நிறைவு.. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
சென்னை:கஜா புயல் விவகாரம், பொங்கல் பரிசு அறிவிப்பு, கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் என பல்வேறு அறிவிப்புகளுடன் தமிழக சட்டசபை கூட்டம் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்சபையின் முதல் கூட்டம், இந்த மாதம் கடந்த 2 ம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்கியவுடனே ஆளுநர் பன்வாரி லால் புரோகித் உரையாற்றினார். ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உட்பட எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு செய்தது.

பின்னர் அவை 5 நாட்கள் நடத்துவது என்று சபாநாயகர் தனபால் தலைமையில் முடிவெடுக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போஸ், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நெல் ஜெயராமன் உட்பட மறைந்த உறுப்பினருக்கு கடந்த 3 ஆம் தேதி இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இடைப்பட்ட நாட்களில் அவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. ஆளுநர் உரையில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசுடன் தலா 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணை கடந்த 4ம் தேதி பிறப்பிக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் கஜா புயல், ஸ்டெர்லைட், மேகதாது அணை மற்றும் விவசாயிகள் பிரச்சனை பற்றி சரியாக கையாளுவதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது என்று கூறி திமுக வெளிநடப்பு செய்தது. இந் நிலையில், தமிழக சட்டசபை கூட்டம் இன்றுடன் நிறைவடைகிறது என்று தெரிவித்து, தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications