“நரகம்”.. எல்லாமே போச்சு! சோறு, தண்ணி இல்லாம.. சூடான் சோகங்களை பகிர்ந்த சென்னை திரும்பிய தமிழர்கள்
சென்னை: சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் சிக்கி இருந்த 9 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு இருக்கும் நிலையில், அங்கு தாங்கள் சந்தித்த துயரங்களையும், உள்நாட்டு போரினால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் தெரிவித்து உள்ளனர்.
"தற்போது என்னிடம் ஒரு ஜோடி ஆடையும் பாஸ்போர்ட்டுமே உள்ளது. மொத்த பணமும் உடைமைகளும் போரில் அழிந்துவிட்டன. அனைத்து நம்பிக்கைகளையும் இழந்துவிட்டேன்." சூடான் போரில் சிக்கி சென்னை திரும்பிய திவ்யா ராஜசேகரன் என்ற பெண் கண்ணீருடன் பேசிய வார்த்தைகள் இவை.

சூடான் போரின் வலியையும் வேதனையையும் தனது முகத்திலும் பேச்சிலுமே உணர முடியும் அளவுக்கு வாழ்க்கையையே அங்கு தொலைத்துவிட்டு உயிர் பிழைத்தால்போதும் என்று எண்ணி தமிழ்நாட்டுக்கு திரும்பி இருக்கிறார் திவ்யா.
சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையிலான போரில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருக்கும் நிலையில், இந்திய அரசின் ஆபரேசன் காவேரி திட்டத்தின் மூலம் நேற்று 360 இந்தியர்கள் விமானம் மூலம் சூடானில் இருந்து தலைநகர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 9 தமிழர்களை தமிழ்நாடு அரசு விமானம் மூலம் இன்று சென்னை விமான நிலையத்துக்கு அழைத்து வந்தது.

சூடானில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பதைபதைப்போடு நாட்களை நகர்த்திய 9 தமிழர்கள் சென்னைக்கு திரும்பியபோது அவர்கள் முகத்தில் ஒருவித நிம்மதி தென்பட்டாலும், வாழ்க்கையை தொலைத்த வாட்டமும் வலியையும் வேதனையையும் பார்க்க முடிந்தது. சூடானில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்த 9 தமிழர்களில் ஒருவர்தான் மடிப்பாக்கத்தை சேர்ந்த திவ்யா.
இன்று மதியம் டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த திவ்யா தற்போது தன்னிடம் ஒரு ஜோடி ஆடையும், பாஸ்போர்ட்டும் மட்டுமே இருப்பதாக வேதனையுடன் தெரிவித்து உள்ளார். 8 ஆண்டுகள் சூடானில் பணி நிமித்தமாக தங்கி வாழ்க்கையை மகிழ்ச்சியோடு கழித்து வந்த திவ்யா, தான் வாழ்ந்த நாடு கண்முன்னே போரில் கருகுவதை கண்டு கலங்கிப்போய் உள்ளார்.
சம்பாதித்த மொத்த பணத்தையும், பொருட்களையும் போரிலேயே போட்டுவிட்டு வெறும் கையோடு நாடு திரும்பி இருக்கும் திவ்யா, இப்போது தனது வாழ்க்கையை புதிதாக தொடங்க வேண்டும் என்றும், தன்னிடம் எந்த நம்பிக்கையும் இல்லை என்றும் புலம்பியுள்ளார். "நாங்கள் 2 நாட்களில் போர் முடிந்துவிடும் என்று நினைத்தோம். ஆனால், 3 வது நாளில் இருந்துதான் எங்களுக்கு பயம் அதிகரிக்கத் தொடங்கியது." என்று கூறுகிறார் சூடானில் இருந்து நாடு திரும்பிய வேலூரை சேர்ந்த சோபியா என்ற பெண்.
போரில் ஈடுபட்டு வரும் துணை ராணுவப் படையின் தலைமையகத்துக்கு அருகாமையில்தான் சோபியாவின் வீடு உள்ளதாம். "எனது கார், பணம், விலை உயர்ந்த பொருட்களை போர் தொடங்கிய 8 வது நாளிலேயே இழந்துவிட்டேன். நாங்கள் நாடோடிகளாகிவிட்டோம்." என்று வேதனையுடன் தெரிவித்து உள்ளார் சோபியா.

"நாங்கள் தயிர் சாதத்தையும் ஊறுகாயையும் சாப்பிட்டு சமாளித்து வந்தோம். சில நாட்களில் உணவும் குடிநீரும் தீர்ந்து பசியில் அவதிப்பட்டோம். நான் கர்ப்பிணியாக உள்ளேன். இந்த இக்கட்டான நேரத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் என்னை தொடர்புகொண்டனர்." என்றார் சோபியா. தங்களுக்கு உதவிய இந்திய தூதகரத்துக்கு அவர் நன்றி தெரிவித்து உள்ளார்.
மற்றொரு தமிழரான ராஜசேகரன் தெரிவிக்கையில், "எனது வீட்டின் கதவை சூடான் ராணுவத்தினர் தட்டினார்கள். நான் திறந்தபோது, இந்தியரா என்று கேட்டனர். ஆம் என்று சொன்னேன். உங்களை துன்புறுத்த மாட்டோம் என்று கூறினார்கள். உணவு, தண்ணீர், பணம் கேட்டு எங்கள் காரை எடுத்துச் சென்றனர்." என்றார்.
-
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை?












Click it and Unblock the Notifications