மின் கட்டணத்தில் வருகிறது புதிய மாற்றம்.. மெசேஜ் உங்களுக்கு வந்ததா? உடனே நோட் பண்ணுங்க.. இனி நிம்மதி
சென்னை: கரண்ட் பில் செலுத்துவது குறித்து அடுத்தடுத்த புதிய மாற்றங்களை தமிழக அரசு செய்து வருகிறது. இந்த தகவலானது, பொதுமக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
தமிழக மக்களின் வசதிக்காகவும், பயன்பாட்டுக்காகவும், மின்வாரியத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கையில் எடுத்துள்ள நிலையில், அதற்கான டெண்டரையும் அரசு கோரியுள்ளது..

மின் கணக்கீட்டாளர்களின் பணியை, இந்த ப்ளூடூத் மீட்டர் செய்கிறது. இதனால் கால நேரம் குறைவதுடன், துல்லியமான கரண்ட் பில் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளலாம்
மொபைல் செயலி: இதேபோல, இன்னொரு வசதியையும் மின்துறை கொண்டுவரப்போவதாக சில நாட்களுக்கு முன்பு செய்தி வந்தது.. அதாவது, மின் ஊழியர்கள் அலுவலகம் வந்து கையடக்க கருவியில் உள்ள கணக்கெடுப்பு விபரங்களை, அலுவலக கம்ப்யூட்டரில் அப்லோடு செய்கிறார்கள்..
சில நாட்களில், மின் கட்டண விபரம் நுகர்வோருக்கு, SMS வாயிலாக அனுப்பப்படுகிறது. ஆனால், கணக்கெடுத்த உடனேயே, கட்டண விபரம் தெரிவிக்க, புது "மொபைல் செயலி" அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட உள்ளதாம். இந்நிலையில், இன்னொரு வசதியையும் மின்துறை அமல்படுத்த போகிறதாம்.
கரண்ட் பில்: அதாவது, கரண்ட் பில் கட்டவில்லையானால், மின் இணைப்பு துண்டிக்கப்படுவது வாடிக்கை.. ஆனால், இப்படி மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்பதை SMS மூலமாகவும், இமெயில் மூலமாகவும் அனுப்ப போகிறார்களாம்.
இந்த மெசேஜ்ஜை பார்த்ததுமே, கஸ்டமர்கள் அலர்ட் ஆவதுடன், மின்சார ஊழியர்களையும் தொடர்பு கொண்டு விவரத்தை தெரிந்து கொள்ளலாம். இதற்கு பிறகு, 6 மணி நேரம் டைம் தரப்படும்.. கரண்ட் பில்லை கட்டியதும், இந்த 6 மணி நேரத்திற்குள் மறுபடியும் கனெக்ஷன் தந்துவிடுவார்கள்.
அபராதம்: இதற்கெல்லாம் மின்வாரிய அதிகாரிகள் நேரடியாக வீட்டுக்கு வர வேண்டியதேயில்லை.. அபராதத்துடன் மின் கட்டணத்தை செலுத்திவிட்டால், தானாகவே இணைப்பை மறுபடியும் தந்துவிடுவார்கள்.
அதேபோல, ரீடிங் எடுப்பதிலும் ஒரு மாற்றம் வரப்போகிறதாம்.. அதாவது இதுவரை 147 யூனிட்கள் என்றால், அதை 150 என்று ரவுண்டாக கணக்கு செய்வது வழக்கம்.. இதனால், கட்டணமும் லேசாக அதிகமாகிவிடும். ஆனால், இனிமேல் இந்த நடைமுறை கிடையாது..
யூனிட்கள்: எத்தனை யூனிட்கள் பயன்படுத்தப்பட்டதோ, அதற்கு மட்டும் "துல்லியமாக" கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்... அதற்குரிய கட்டணத்தை மட்டுமே கட்டினால் போதும்... அதுவும் ஆன்லைனில் கட்டினால், எந்த பிரச்சனையுமே வராது.. நேரடியாக கரண்ட் பில் கட்ட சென்றால், சரியான சில்லறையுடன் சென்றாலே போதும் என்கிறார்கள். நாளுக்கு நாள், இந்த சலுகைகளும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருவது, பொதுமக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications