எதிர்பார்த்த கூட்டமில்லை.. ஆனாலும் குறையவில்லை.. வியக்க வைத்த சென்னை டாஸ்மாக் வசூல்
சென்னை: சென்னையில் டாஸ்மாக் கடை திறந்த முதல் நாளில் 20 கோடி ரூபாய் வசூல் ஈட்டியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக சென்னையில் ஒரு நாளில் 12 கோடிக்கு தான் வசூல் ஆகும்.
இந்நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு கடை திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் அதிக அளவு மது வாங்கி உள்ளது வசூல் நிலவரம் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்னையில் மார்ச் மாதத்திற்கு பின் நேற்று (ஆக.18) தான் டாஸ்மாக் மதுககடைகள் திறக்கப்பட்டது. சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 720 கடைகள் திறக்கப்பட்டது. காலை 10 முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறக்கப்பட்டிருந்தது.

மது வாங்க டோக்கன்
சென்னையில் டோக்கன் அடிப்படையில் மது வழங்கப்பட்டது. மைக்செட் அமைத்து தடுப்பு போட்டு , ஒவ்வொரு கடையிலும் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டு அவர்களுக்கு மது வழங்கப்பட்டது.

குவிந்த போலீஸ் படை
சென்னையில் 5 மாதங்களுக்கு பின்னர் கடைகள் திறக்கப்பட்டதால் பெரிய அளவில் கூட்டம் வரும் என்பதால் நீண்ட வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் கூட்டம் அதிகமாக வர வாய்ப்பு உள்ளதாக கருதி போலீஸ் படையும் டாஸ்மாக் முன்பு குவிக்கப்பட்டது. பலர் காலை 8 மணிக்கே மதுவாங்க கடை முன்பாக நின்று இருந்தார்கள். சென்னை மயிலாப்பூரில் நீண்ட வரிசையில் நின்று டோக்கன் பெற்று குடிமகன்கள் மதுபானங்களை வாங்கினர்.

சமூக இடைவெளி இல்லை
இதேபோல் பல இடங்களிலும் மதியத்திற்கு பிறகு கூட்டம் அதிகமாக இருந்தது. மாலையில் கூட்டம் வெகுவாகவே இருந்தது. கூட்டம் அதிகமாக இருந்த கடைகளில் இரண்டு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டது. திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயப்ப்டடை, சேப்பாக்கம், வண்ணாரப்பேட்டை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் குடிமகன்கள் மதுக்கடைகள் முன்பு குவிந்தனர். சமூக இடைவெளியை பின்பற்றாமல் சரக்கு வாங்கி சென்றதை காண முடிந்தது.

20 கோடிக்கு மதுவிற்பனை
கூட்டம் எதிர்பார்த்த அளவு இல்லைஎன்கிற போதிலும் மதுவிற்பனை அமோகமாகவே இருந்துள்ளது. சென்னையில் வழக்கமாக 12 கோடிக்கு தினமும் மதுவிற்பனையாகும் என்றால், வார இறுதியில் 15 கோடிக்கு மது விற்பனையாகும். ஆனால் 5 மாதங்களுக்கு பின் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுவிற்பனை அதிகமாக இருந்தது. நேற்று ஒரே நாளில் 20 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.
Recommended Video

வார இறுதியில்
வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை அன்று கூட்டம் அதிகரிக்கும். எனவே அப்போது மதுவிற்பனை இதை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுக்கடைகள் 5 மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்ட காரணத்தால் நேற்று பல குடிமகன்கள் சென்னையில் மதுபோதையில் உற்சாகமாக சுற்றினர்.
-
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications