தமிழகத்தில் மீண்டும் களைகட்டிய மதுபான விற்பனை.. அதிர வைக்கும் குடிகாரர்கள்.. எங்கு அதிகம் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை மீண்டும் தாறுமாறாக உயர்ந்தள்ளது. சனிக்கிழமை ஒரே நாளில் 120 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றும் 100 கோடிக்கு அதிகமாக விற்பனை ஆகி இருக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 7ம் தேதி மற்றும் 8ம் தேதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட போது திருவிழா போல் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அந்த இரண்டு நாட்களில் மட்டும் 295 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்ற காரணமாக 16ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன.

மூன்று நாளில் ரூ.400 கோடி
16ம் தேதி மட்டும் ரூ.163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. 16 முதல் 19ம் தேதிக்குள் ரூ.402.9 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. ஆனால் செவ்வாய்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மதுபானங்கள் விற்பனை என்பது பெரும் சரிவினை கண்டது. கடை நேரம் இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்ட போதும் மதுக்கடைகளை கூட்டம் இல்லை. வெறிச்சோடி காணப்பட்டது.

ஏன் காற்று வாங்கியது
இதற்கு குடிமகன்கள் அதிகம் விரும்புகின்ற போதிய மதுபானங்கள் இருப்பில் இல்லாததே காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும் விலையும் அதிகமாக இருந்தது. பாட்டிலுக்கு கூடுதல் விலை வாங்கியது போன்றவை காரணமாக கூறப்பட்டது. இதற்கிடையே கட்டுப்பாட்டு மண்டலங்கள் குறைய குறைய நிறைய மதுக்கடைகள் மீண்டும் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 80க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

ரூ.120 கோடிக்கு விற்பனை
இதனிடையே மது விற்பனை சனிக்கிழமை முதல் மீண்டும் அதிகரித்துள்ளது. விடுமுறை நாளான சனிக்கிழமை ஒரு நாளில் ரூ.120.4 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாக சொல்லப்படுகிறது. சென்னை மண்டலத்தில் ரூ.17.2 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.26.8 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.25 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.24.1 கோடிக்கும் விற்பனையாகி உள்ளது.

மதுரை வசூல் எவ்வளவு
தமிழகத்திலேயே அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.27.3 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்டாக் வட்டாரங்கள் தெரிவித்தன. ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் ரூ.100 கோடிக்கும் அதிகமான மதுபானங்கள் விற்பனையாகி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களும் விடுமுறை தினங்கள் என்பதால் மதுபான விற்பனை களை கட்டியதாக கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications