நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடல்? ஊழியர்கள் ஸ்ட்ரைக்கால் கடைகள் இயங்காது?
சென்னை: நாளை மறுநாள் (பிப்ரவரி 17 ஆம் தேதி) தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 17 ஆம் தேதியில் இருந்து பணிக்கு செல்ல மாட்டோம் என்றும் டாஸ்மாக் ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1 ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தை சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.சி. பாட்டாளி, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து நடத்துகின்றன. டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களும் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். அரசு இதுவரை அழைத்து பேசாததால் அடுத்த கட்டமாக வரும் 17 ஆம் தேதி முதல் காலவரையற்ற கடை அடைப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். போராட்டம் குறித்த நோட்டீஸ் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாளை (பிப்ரவரி 16 ஆம் தேதி) இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடைகளை மூடி சாவியை நிர்வாகத்திடம் கொடுத்து விடுவதாகவும் 17 ஆம் தேதியில் இருந்து பணிக்கு வர மாட்டோம் என்றும் டாஸ்மாக் ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், தமிழ்நாட்டில் 4,749 டாஸ்மாக் கடைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இதில் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மிகவும் குறைந்த சம்பளத்தில் 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை.
14 நாட்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் எங்களை இதுவரை அரசு அழைத்துப் பேசவில்லை. அதனால் பணி புறக்கணிப்பு போராட்டத்தை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் காலிபாட்டில் ஸ்டிக்கர்களை ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவியாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதால் பாதிப்பு ஏற்படக்கூடும். ஆளுங்கட்சியான திமுகவின் தொழிற்சங்கமான தொமுச தொழிலாளர்கள் இதில் பங்கேற்பார்களா என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.
தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை தவிர்க்க டாஸ்மாக் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது, அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும்.
-
சிறுக சிறுக 25 சவரன் சேர்த்த விசுவாசி… சென்னை தி.நகரில் பிரபல தங்க நகைக்கடை அலறியது ஏன்?” -
ECR 2.0: சென்னையின் ‘மெகா’ முகம் மாறுகிறது! நந்தவனம் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை.. எல்லாமே மாறுது -
விஜயின் தவெகவிற்கு ‘செக்'.. சென்னையின் 16 தொகுதிகளில் வெல்ல சபரீசன் வியூகம்.. ரெடியான 5 லட்சம் பேர் -
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
சென்னையில் கடும் சம்மருக்கு இடையே திடீர் பிங்க் வசந்தம்.. பூத்து குலுங்கும் மலர்கள்! எப்படி நடந்தது? -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications