பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்!
தமிழகத்தில் டாஸ்மாக் (TASMAC) மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாகப் பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதுத்தொடர்பாக ரிப்போர்ட் கொடுக்க முதல்வர் விஜய் ஏற்கனவே உளவுத்துறைக்கு உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் இணைந்து மாநிலம் முழுவதும் கடந்த மே 28ஆம் தேதி அதிரடியான கூட்டுச் சோதனையை நடத்தின.

இந்தத் திடீர் சோதனையின் போது, டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட MRP விலையை விட கூடுதலாக ரூ.10 முதல் ரூ.50 வரையிலும், சில இடங்களில் அதற்கு மேலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது கச்சிதமாகக் கண்டறியப்பட்டது.
இந்த மிகப்பெரிய முறைகேட்டின் அடிப்படையில், முதற்கட்டமாக 277 கடைப்பணியாளர்களை டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளது.
அதிர்ச்சி கொடுத்த சஸ்பெண்ட் உத்தரவு
இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (TASMAC) தற்பொழுது அதிகாரப்பூர்வமான மிக முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கடந்த மே 28ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய 277 பணியாளர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறு முறைகேடுகளில் ஈடுபட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்குத் டாஸ்மாக் நிர்வாகம் தற்பொழுது முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது ஒட்டுமொத்த டாஸ்மாக் வட்டாரத்திலும் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் வேலை வேண்டுமா?
பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றால், அவர்கள் பின்வரும் நிபந்தனைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் கறாராகக் கூறியுள்ளது.
அபராதம் மற்றும் ஜிஎஸ்டி வட்டி: கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து பிடிபட்ட பணியாளர்கள் தங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை, அதற்கான சரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் அதற்குரிய வட்டித்தொகை ஆகியவற்றை முழுமையாக வங்கியில் செலுத்தி, அது செலுத்தப்பட்டதை டாஸ்மாக் நிர்வாகத்திடம் உறுதி செய்ய வேண்டும்.
சம்பள உரிமை ரத்து: சஸ்பெண்ட் செய்யப்பட்டு வேலை செய்யாமல் இருந்த நாட்களுக்குத் டாஸ்மாக் நிர்வாகத்திடம் எந்தவிதமான சம்பளமும் கேட்க மாட்டேன் எனப் பணியாளர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும்.
காப்புத்தொகை சரிபார்ப்பு: ஊழியர்கள் பணியில் சேரும்போது செலுத்திய காப்புத்தொகை (Caution Deposit) தற்பொழுது முழுமையாக அரசிடம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பொது கலந்தாய்வு கட்டாயம்: இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் தங்களுக்குப் பிடித்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று பணியை செய்ய முடியாது, பொது கலந்தாய்வு (General Counselling) வாயிலாக மட்டுமே அவர்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நிரந்தர பணிநீக்க எச்சரிக்கை: மீண்டும் இதேபோன்று கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யும் தவறுகளில் ஈடுபட்டால், எவ்வித விசாரணையும் இன்றி அவர்கள் நிரந்தரமாகப் பணிநீக்கம் (Dismiss) செய்யப் பரிந்துரைக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
அரசின் அதிரடி ஆக்ஷன்
தமிழ்நாட்டில் மதுக்குடிப்போர் தங்களது உழைப்பில் ஒரு பகுதியை இந்த மதுபான கொள்முதலுக்குச் செலவிட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், அரசு நிர்ணயித்த விலையைத் தாண்டி அவர்களின் பாக்கெட்டில் கூடுதலாக பணம் பறிக்கப்படுவதை ஒடுக்கவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனிவரும் நாட்களிலும் இதுபோன்ற கூடுதல் விலை விற்பனை தொடர்பான வேட்டை தொடரும் என்றும், மீறும் ஊழியர்கள் மீது இரக்கமின்றி நடவடிக்கை பாயும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?















Click it and Unblock the Notifications