Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்.. அடுத்தடுத்து மயக்கமடைந்த ஆசிரியர்கள்.. சென்னையில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரத போராட்டத்தின்போது மயங்கி விழுந்த 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 2009 ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டதால், ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் 14 ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 Teachers fainting during hunger strike in chennai

அதிமுக ஆட்சியில் ஆசிரியர்கள் இதற்காக போராடியபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பதால் போராட்டத்தை அறிவித்தனர்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆசிரியர்கள் அறிவித்தனர். இதுதொடர்பாக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், ஏற்கெனவே அறிவித்தபடி கடந்த 28-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

மேலும், மற்ற ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். அன்று இரவு கொட்டும் மழையின்போதும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது. அப்போது 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த ஆசிரியர்கள் கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

 Teachers fainting during hunger strike in chennai

இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அடுத்து தொடக்க கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சங்க நிர்வாகிகளை நேற்று மாலை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதையடுத்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் அவரது அலுவலகத்துக்கு சென்றனர். கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என நிர்வாகிகள் உறுதியாக கூறியதால் அமைச்சருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக இயக்குநர் உறுதியளித்தார்.

தொடர்ந்து, ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருவதால் டிபிஐ வளாகத்தில், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் மயங்கி விழுந்தாலும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. அரசு உடனடியாக ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+