15419 பணியிடங்கள்! ஆசிரியர் கனவு நனவாகப் போகிறது! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம்
சென்னை : தமிழகத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர் மற்றும் பேராசிரியர் உள்ளிட்ட சுமார் 15,149 காலி பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருக்கிறது.
தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டின் இறுதி பகுதியிலும் அடுத்த ஆண்டில் நடத்தப்பட உள்ள தேர்வுகள் குறித்த அட்டவணையை தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடுவது வழக்கம்.

ஆசிரியர் தேர்வு வாரியம்
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள தேர்வுகள் குறித்த அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி மொத்தம் 15 ஆயிரத்து 149 காலிப்பணியிடங்களுக்காக நடத்தப்படும் ஒன்பது தேர்வுகள் குறித்த அட்டவணை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. முதலாவதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆசிரியர் பயிற்சி கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிடப்பட இருக்கிறது 4000 பணியிடங்களுக்கான இந்த தேர்வு 2023 ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கிறது.

தேர்வு அறிவிப்பு
பிளாக் எஜுகேஷனல் ஆபிசர் எனப்படும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு 23 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்டு தேர்வானது மே மாதம் நடைபெற இருக்கிறது. 6553 காலிப்பணியிடங்களுக்கான இடைநிலை ஆசிரியர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு மே மாதம் நடைபெறும்.

பட்டதாரி ஆசிரியர்
3,587 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். தேர்வு வரும் ஜுன் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஜுன் மாதம் வெளியிடப்படும். இதன்மூலம் , 97 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு வரும் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு
அரசு சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் 129 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்பட்டு அக்டோபர் மாதத்தில் தேர்வு நடைபெறும் போஸ்ட் கிராஜுவேட் அசிஸ்டன்ட் பணிக்கு 2067 காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு நவம்பர் மாதம் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதேபோல் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்றும், இத்தேர்வு குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சிறுக சிறுக 25 சவரன் சேர்த்த விசுவாசி… சென்னை தி.நகரில் பிரபல தங்க நகைக்கடை அலறியது ஏன்?” -
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications