சொந்த பள்ளியில் அட்மிஷனுக்கே லஞ்சமா?.. ரூ 6 லட்சத்தை ஏமாற்றியதாக பாஜக நிர்வாகி மதுவந்தி மீது புகார்
சென்னை: பிஎஸ்பிபி பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ 6 லட்சத்தை மோசடி செய்ததாக அப்பள்ளி நிர்வாகி பாஜகவை சேர்ந்த மதுவந்தி மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் கிருஷ்ண பிரசாத். இவர் அதே பகுதியில் கோவிந்தன் சாலையில் உள்ள ஒரு கோயிலின் நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார்.
இன்று கிருஷ்ணபிரசாத் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். இதையடுத்து மோசடி புகார் தொடர்பாக செய்தியாளர்களையும் கிருஷ்ண பிரசாத்தின் வழக்கறிஞர் முத்துகுமார் சந்தித்துள்ளார்.

பாஜக நிர்வாகி மதுவந்தி
அவர் கூறுகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கிருஷ்ணபிரசாத் நிர்வகித்து வரும் கோயிலுக்கு நடிகர் ஒய் ஜி மகேந்திரனின் மகளும் பாஜக நிர்வாகியுமான மதுவந்தி வருகிறார். அப்போது கிருஷ்ணபிரசாத்திடம் தான் பிஎஸ்பிபி பள்ளியை நிர்வகித்து வருகிறேன். பள்ளியில் சேர்க்க விரும்புவோர் தலா 3 லட்சம் கொடுத்தால் சீட்டு வாங்கி தருகிறேன் என மதுவந்தி தெரிவித்துள்ளார்.

8 பேரிடம் பணம்
இதையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோயிலுக்கு வரும் 8 நபர்கள் சீட்டு கேட்டு கிருஷ்ணபிரசாத்திடம் கொடுத்த 19 லட்சத்தை மதுவந்தியிடம் அவரது இல்லத்தில் வைத்து கொடுத்துள்ளார். பணம் கொடுத்தும் நீண்ட மாதங்களாகியும் சீட் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் காவ்ல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

ரூ 13 லட்சத்தை திருப்பி கொடுத்த மதுவந்தி
அப்போது அச்சமடைந்த மதுவந்தி ரூ 13 லட்சத்தை பெற்றோர்களிடம் திருப்பி கொடுத்துவிட்டார். மீதமுள்ள ரூ 6 லட்சத்தை தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் கிருஷ்ணபிரசாத்திடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். பணம் குறித்து மதுவந்தியிடம் கிருஷ்ணபிரசாத் கேட்டுள்ளார்.

அடியாட்கள் மூலம் தாக்குதல்
அதற்கு கிருஷ்ணபிரசாத்தை மதுவந்தி அடியாட்களை வைத்து தாக்கியுள்ளார். தாக்கியது தொடர்பாக பாண்டிபஜார் காவல் நிலையத்தில் கிருஷ்ணபிரசாத் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது ஆதாரங்களை சமர்பித்து மதுவந்தியிடம் பணத்தை மீட்டு கொடுக்குமாறு காவல் ஆணையரிடம் புகார் அளித்தோம் என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மதுவந்தி
இதுகுறித்து மதுவந்தி கூறுகையில் பிஎஸ்பிபி பள்ளி எங்களுடையது. நான் ஏன் பணம் வாங்க வேண்டும். கிருஷ்ண பிரசாத் அளித்த புகார் முற்றிலும் பொய். பணத்தை அவர் ஏமாற்றிவிட்டு என் மீது கிருஷ்ணபிரசாத் பழி போடுகிறார். உரிய ஆதாரங்களுடன் கிருஷ்ணபிரசாத் மீது புகார் அளிப்பேன் என மதுவந்தி விளக்கமளித்துள்ளார்.

ஏலத்திற்கு வந்த வீடு
பிஎஸ்பிபி பள்ளியில் மாணவிகள் முன்பு ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் அரை நிர்வாணமாக வந்தது, பாலியல் தொல்லைகள் கொடுத்தது தொடர்பாக புகார் எழுந்த போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்த நிலையில் பல கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்ததால் மதுவந்திக்கு சொந்தமான வீட்டை வங்கி தரப்பு ஏலத்திற்கு கொண்டு சென்றது. அங்கிருந்த அதிகாரிகளிடம் மதுவந்தி கெஞ்சிய காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது. பாஜகவை சேர்ந்த மதுவந்தி பெரும்பாலான விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளையே சொல்லி வருகிறார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications