தமிழகம் முழுவதும் இன்று முதல் வழிப்பாட்டு தலங்கள் திறப்பு.. அதிகாலையிலேயே குவிந்த மக்கள்
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறக்கப்பட்டுள்ளன. சுமார் 5 மாதங்களுக்கு பின்னர் இவை திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Recommended Video
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியன இத்தனை நாட்கள் மூடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கடந்த மாதம் முதல் ஆண்டு வருமானம் சுமார் 10ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள கோயில்களை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. பிரபல கோயில்களான மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் உள்ளிட்ட கோயில்கள் திறக்கப்படவில்லை.

அன்லாக் 4.0
தமிழகத்தில் இந்த மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் பல தளர்வுகள் அன்லாக் 4.0 என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கோயில்கள் திறப்பு, வணிக வளாகங்கள், பெரிய கடைகள் திறப்பு, முழு லாக்டவுன் நீக்கம், பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

வழிகாட்டும் நெறிமுறைகள்
தமிழகத்தில் இன்று முதல் கோயில்கள் திறப்பு என்பதால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் காலை முதலே பக்தர்கள் குவிந்துள்ளார்கள். அது போல் மசூதிகள், தேவாலயங்களும் இன்று முதல் திறக்கப்படுகின்றன. இங்கு பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டும் நெறிமுறைகள் குறித்து தனித்தனியே அறிவிக்கப்பட்டுள்ளன.

தடை
கோயில்களில் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும், பூ,பழம் அர்ச்சனை தட்டு உள்ளிட்டவற்றை கொண்டு செல்லக் கூடாது. விபூதி, குங்குமம், பிரசாதம், ஜடாரி உள்ளிட்டவை பக்தர்களுக்கு வழங்கக் கூடாது. கொடி மரத்தை தொடுவதோ, அதன் அருகே பக்தர்கள் உட்காருவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகக் கவசம்
பக்தர்கள், அர்ச்சகர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது போல் தேவாலயங்களுக்கு வருவோர் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், பூக்களை கொண்டு வரக் கூடாது, புனித நூல்களை தொடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொழுகைகள்
அது போல் மசூதிகளில் தனிநபர் இடைவெளியுடன் தொழுகைகள் நடத்தப்பட வேண்டும். அதற்கான விரிப்புகளை அவர்களாகவே கொண்டு வர வேண்டும். இறுதி தொழுகை இரவு 7.45 மணிக்கு தொடங்கி 8 மணிக்கு முடித்து விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் இவை அனைத்து இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது இந்த வழிபாட்டு தலங்கள் சுத்தப்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.வழிபாட்டு தலங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது. கிருமிநாசினியும் வழங்கப்படுகிறது.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
பழனி கோவில் பஞ்சாமிர்தம் விலையை உயர்த்த முடிவு? விஷ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications