TET Exam: ஆசிரியர் தகுதி தேர்வு தேதிகள் அறிவிப்பு.. பிப்ரவரி 18 முதல் ஏப்ரல் 10 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதிக்கான ‛டெட்' தேர்வு (TET Exam)தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் ‛டெட்' தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற TET எனும் ஆசிரியர் தகுதி தேர்வில் பாஸாக வேண்டும். இந்த ‛டெட்' தேர்வு என்பது ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டுக்கான ‛டெட்' தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தேர்வு தேதிகள், விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் உள்ளிட்ட பிற விவரங்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 4, 5ல் தேர்வு
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளதாவது: ‛‛தமிழகத்தில் ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும். ஜூலை 4ல் ‛டெட்' முதல் தாள் தேர்வும், ஜூலை 5ம் தேதி ‛டெட்' 2ம் தாள் தேர்வு நடைபெறும்.
தேர்வுக்கு பிப்ரவரி 18 ம் தேதி முதல் ஏப்ரல் 10 ம்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். தேர்வுக்கு முந்தைய நடைமுறைகள் பின்பற்றப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் மூலம் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். முந்தைய நடைமுறை தான் பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளதால் இதற்கு முன்பே போல் ஆசிரியர்கள் தங்களின் தேர்வுக்கு தயாராகலாம்.
டெட் தேர்வு பின்னணி
முன்னதாக தமிழகத்தில் தொடக்க கல்விக்கான இடைநிலை ஆசிரியர், உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம், ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி இத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இன்று தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கக்கடலில் நடந்த மாற்றம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கரூர் எஸ்.பியை மாற்ற வேண்டும் என அண்ணாமலை சொன்ன அடுத்த சில மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் போட்ட ஆர்டர் -
ஸ்டாலினுக்கு 41.2% சதவீத மக்கள் ஆதரவு! மீண்டும் முதலமைச்சராக வருவார் என CNN கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
வாக்காளர்களிடையே நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியதா.. விஜய்-சங்கீதா கேஸ்? CNN கருத்துக்கணிப்பில் ஷாக் -
ரஜினி பற்றி வாயை விட்ட ஆதவ் அர்ஜுனா.. பாய்ந்து வந்த பாஜக! அப்போ கூட்டணி இல்லையா! -
சர்ச்சை ஓய்ந்தது.. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு! -
குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்… திமுக முகாமில் கிளைமேக்ஸ் மாறுமோ? -
4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்.. தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அதிரடி! -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் மாற்றம்! 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் PAN தேவையா? -
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எப்போது வரை பெயர் சேர்க்கலாம்? தேர்தல் ஆணையம் விளக்கம் -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி












Click it and Unblock the Notifications