முதல்வர் பேச்சு ஏமாற்றம்.. ரூல் 161ல் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யுங்க.. தமிமுன் அன்சாரி ஆவேசம்!
சென்னை: 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரி இன்று சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் முற்றுகைப் போராட்டம் நடத்திய தமிமுன் அன்சாரி, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'சட்டப்பிரிவு 161 ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்ததுபோல், 20 ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்' எனக் கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சென்னை ஐஸ்ஹவுஸ் மசூதி அருகே இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்தப் போராட்டத்தின்போது மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி பேசுகையில், "20 ஆண்டுகளை கடந்து தமிழ்நாட்டில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் சிறைவாசிகளை விடுவிக்க கோரி கூடியுள்ளோம். நேற்று 5 கட்சிகள் தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. அக்கட்சிகளுக்கு நன்றி.
ஆனால், முதலமைச்சர் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அளித்த பதில் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறோம், ஆளுநர் முடிவெடுத்த பிறகு விடுதலை செய்கிறோம் எனக் கூறியுள்ளார். ஆளுநரிடம் எந்த விடையும் கிடைக்காது என்பது முதல்வருக்கும் தெரியும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியும். ஆளுநரிடம் ஏற்கனவே 22 மசோதாக்களுக்கு பதில் வரவில்லை.

ஆகவே தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி, சட்டப்பிரிவு 161 ஐ பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ததுபோல், 20 ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய சமூகத்தினரை விடுதலை செய்ய வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் கனிவான உள்ளத்தோடு, சாதி, மத, பேதம் இன்றி 20 ஆண்டுகள் கடந்த அனைத்து சிறைவாசிகளையும் விடுவிக்க வேண்டும்.
தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி 161ஆவது சட்ட பிரிவை நிறைவேற்றிய பின், ஆளுநருக்கு தீர்மானத்தை அனுப்பி வைத்துவிட்டால் அடுத்து எங்கள் போராட்டம் எல்லாம் ஆளுநர் மாளிகையை நோக்கித்தான் இருக்கும். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக திருச்சியில் மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம். இந்த கோரிக்கையை முன்வைத்து எந்தக் கட்சி போராட்டத்தை நடத்தினாலும் வேறுபாடின்றி உடன் நிற்போம்" எனத் தெரிவித்தார்.
சென்னையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரி உள்ளிட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் சுமார் 150 பேர், கைது செய்யப்பட்டு வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
-
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications