வெளிநாடு வாழ் தமிழர்களை மீட்கக் கோரி... போராட்டத்தை முன்னெடுத்த தமிமுன் அன்சாரி
சென்னை: வெளிநாடு வாழ் தமிழர்களை மீட்கக் கோரி மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி பல்வேறு இயக்கங்களை ஒருங்கிணைத்து பதாகை ஏந்தும் போராட்டத்தை முன்னெடுத்தார்.
தமிமுன் அன்சாரியின் கோரிக்கையை ஏற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய கம்யூ.கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, பழ.நெடுமாறன், உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். அவரவர் வீடுகளுக்கு வெளியே பதாகைகளை ஏந்தியபடி நின்ற அவர்கள், அரசுக்கு கோரிக்கை வைக்கும் வகையில் முழக்கம் எழுப்பினர்.

இந்தப் போராட்டம் நாளை மற்றும் நாளை மறுதினமும் அறவழியில் சமூக இடைவெளியுடன் நடைபெறும் என்றும், அதில் இன்னும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள் எனவும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தெரிவிக்கின்றனர். இதனிடையே நாகை மாவட்டம் தோப்புத்துறையில் உள்ள தனது இல்லம் முன்பு பதாகையை ஏந்தி வெளிநாட்டு தமிழர்களை மீட்கக் கோரி தமிமுன் அன்சாரி முழக்கம் எழுப்பினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவுக்கு அந்நிய வருவாயை ஈட்டித்தருவதில் மலையாளிகளுக்கு அடுத்தபடியாக தமிழர்கள் தான் உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் கொரோனா நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வேலையிழந்து ஊர் திரும்ப வழியின்றி தவித்து வருவதாக கூறினார். அவர்களை மீட்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக அமைக்கப்பட்ட வாரியத்தை ஒரு IAS அதிகாரியை கொண்டு உயிரூட்ட வேண்டும் என்றும் தமிமுன் அன்சாரி வலியுறுத்தினார். இதனிடையே இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயக்குநர்கள் கவுதமன், களஞ்சியம், காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜயதரணி உள்ளிட்டோரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications