சாப்பிடும் போது பேசக் கூடாது ஏன்? அப்துல் கலாம் கூறிய அட்டகாசமான விளக்கம்.. நடிகர் தாமு பிளாஷ்பேக்
சென்னை: சாப்பிடும் போது ஏன் பேசக் கூடாது என்பதற்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒரு அருமையான விளக்கத்தை கொடுத்ததாக நடிகர் தாமு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளாக நகைச்சுவை நடிகராக இருந்து வருகிறார் நடிகர் காமு. இயக்குநர் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் இந்த தாமு. இவர் கல்வி சேவையாளராக இருந்து வருகிறார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசனையுடன் 2011 ஆம் ஆண்டு முதல் கல்வி சேவை வழங்கி வருகிறார். இளைஞர்களின் மனதில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க பாடுபட்டு வருகிறார். இதற்காக இவர் கலாமிடம் நேரடியாக பயிற்சி பெற்றவர்.
அப்துல் கலாமின் முக்கோணக் கல்விக் கோட்பாட்டை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தினார் தாமு. போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வை அளித்து வருகிறார். இவர் கலாமுடன் 7 ஆண்டுகளாக பணியாற்றினார். இவர் ஒரு மிமக்ரி கலைஞரும் கூட!
நடிகர், மிமிக்ரி கலைஞர், காமெடியன் என எல்லாவற்றையும் விட அவருடைய கல்வி சேவைதான் தற்போது எல்லார் மனதிலும் நிற்கிறது. போதை குறித்து அவர் விழிப்புணர்வு ஏற்படுத்த பேசும் பேச்சை கேட்டு எப்படிப்பட்டவரும் போதை பழக்கத்திற்கே செல்ல மாட்டார்கள். அந்த வகையில் அற்புதமாக இருக்கும் அவருடைய பேச்சு.
நடிகர் விவேக்கை போல தாமுவுக்கும் அப்துல் கலாமுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. விவேக்கை எப்படி மரம் நடச் சொன்னாரோ அது போல் தாமுவை வைத்து மாணவர்களை நல்வழிப்படுத்த கூறினார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் தாமு அப்துல் கலாம் குறித்த சுவையான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் ஒரு முறை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் எல்லாரும் சாப்பிட்டு கொண்டே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வந்தவுடன் எல்லாரும் அமைதியாகவிட்டனராம்.

ஏனென்றால் அவருக்கு சாப்பிடும் போது பேசக் கூடாதாம். இதை தாமுவே கலாமிடம் கேட்டுள்ளார். "ஐயா சாப்பிடும் போது ஏன் பேசக் கூடாது, புரைக்கு ஏறிவிடும் என்பதாலா" என கேட்டுள்ளார். அதற்கு அப்துல் கலாம் ஒரு அற்புதமான விளக்கத்தையும் கூறியுள்ளார். அப்துல் கலாம், தாமுவிடம் Eat என்றால் என்ன என கேட்டுள்ளார்.
அதற்கு தாமு " ஈட் என்றால் சாப்பிடுதல் என்று பொருள் அய்யா" என்று கூறியுள்ளார். அப்போது கலாம் "Eat Experience All the Taste என்று அர்த்தம் என கூறினாராம். அதனால்தான் சாப்பிடும் போது பேசக் கூடாது, டிவி பார்க்கக் கூடாது, போன் பார்க்கக் கூடாது என்றாராம். உணவின் சுவைகளை அனுபவிக்க வேண்டும் என்றாராம். இப்படியொரு விளக்கத்தை கேட்ட தாமுவுக்கு ஷாக் ஆகிவிட்டதாம்.












Click it and Unblock the Notifications