Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“பெரியார், அண்ணா, கலைஞர்”.. பட்ஜெட் தொடக்கமே சரவெடி -தங்கம் தென்னரசுவின் முத்து முத்தான அறிவிப்புகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 தமிழ்நாடு பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தொடக்கத்திலேயே பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதியின் பெயரை மேற்கோள் காட்டி திட்டங்களை அறிவித்து இருக்கிறார்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆண்டு கூடிய நிலையில் இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட்டின் தொடக்கத்தில் இருந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் அவர், திராவிட இயக்க தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரது பெயர்களை சுட்டிக்காட்டி அவர்கள் பெயரிலும், அவர்களின் ஆக்கங்களின் பெயரிலும் திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

Thangam Thennarsu announcing Budget by quoting the names of Periyar, Anna and Karunanidhi

"தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்ல உதவும் வரவு செலவுத் திட்டத்தை உருவாக்கிட வேண்டிய தேவை எழும்போதெல்லாம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா. முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழிகாட்டுதல்கள் மட்டுமே கலங்கரை விளக்கமாய் எங்களுக்கு அமைந்தன." என்று குறிப்பிட்டு தனது அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கினார்.

பேரறிஞர் அண்ணா: குறிப்பாக திமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணா எழுதிய 'மாபெரும் தமிழ் கனவு' என்ற புகழ்பெற்ற நூலின் பெயரை தலைப்பாக 7 அம்ச திட்டங்களை தங்கம் தென்னரசு அறிவித்து இருக்கிறார். சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழ்நாடு, அறிவுசார் பொருளாதாரம், சமுத்துவ நோக்கில் மகளிர் நலன் என 7 அம்சங்களை அறிவித்து இந்த பட்ஜெட்டின் சாராம்சத்தை விளக்கினார்.

கலைஞர் கருணாநிதி: அதன் தொடர்ச்சியாகதான் சிக்சர் அறிவிப்பை கலைஞர் கருணாநிதி பெயரில் வெளியிட்டார் தங்கம் தென்னரசு. தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் குடிசைகளை மாற்றி அனைவருக்கும் நிரந்தர கான்கிரீட் வீடுகள் அமைத்துத் தரப்படும் நோக்கில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் கிராமப்புறங்களில் மொத்தம் 8 லட்சம் குடிசை வீடுகளில் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்குடன் 2030 ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

குறிப்பாக ஒரு வீடு ரூ.3.5 லட்சம் செலவில் 2024 - 25 ஆம் ஆண்டுக்கும் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவித்தார். இந்த புதிய திட்டம் ;கலைஞரின் கனவும் இல்லம்' என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். இதற்காக வரும் நிதியாண்டில் ரூ.3,500 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என அவர் உறுதியளித்தார்.

பெரியார்: அதன் தொடர்ச்சியாக தந்தை பெரியாரின் பெயரை மேற்கோள் காட்டி சிறப்பான அறிவிப்பை அவர் வெளியிட்டார். 1919 ஆம் ஆண்டு 105 ஆண்டுகளுக்கு முன்பே காவிரி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்து 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் நீர் தேக்கம் செய்து ஈரோடு நகரெங்கும் குழாய்களில் பாதுகாப்பு குடிநீர் வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம் செய்து நிகழ்த்திக் காட்டியவர் அன்று ஈரோடு நகர்மன்ற தலைவராக பதவி வகித்த தந்தை பெரியார் என்று அவர் குறிப்பிட்டார்.

பெரியாரின் வழியில் நடைபெற்று வரும் திராவிட மாடல் அரசு கடந்த 3 ஆண்டுகளில் ஊரக பகுதிகளுக்கு 46 லட்சம் குடிநீர் இணைப்புகளை வழங்கியதுடன், ரூ.365 கோடி மதிப்பீட்டில் 2000 புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் இந்த ஆண்டு அமைக்கப்படும் என சிறப்பான திட்டத்தை தங்கம் தென்னரசு அறிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+