Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலை முகத்தில் விழுந்த செல்போன்.. பூக்களோடு வீசப்பட்டதும் அவர் கொடுத்த ரியாக்ஷன்

Subscribe to Oneindia Tamil

மதுரை: சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் வேட்பாளர் திருமாறனை ஆதரித்து பாஜக முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் 11 நாட்களை உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் வேட்பாளர் திருமாறனை ஆதரித்து பாஜக முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொள்ள பேருந்து நிலையம் முன்பு வருகை தந்தார்.

Annamalai

அப்போது கட்சி நிர்வாகிகள் அண்ணாமலைக்கும், வேட்பாளர் திருமாறனுக்கும் மலர் மாலைகளைகளையும், பூக்களையும் தூவினர். அப்போது திடீரென பூக்களுடன் செல்போன் ஒன்று பறந்தது வந்தது.அந்த செல்போன் அண்ணாமலையின் முகத்தில் பட்டு பிரச்சார வாகனத்தின் முன் விழுந்தது. முகத்தில் செல்போன் பட்ட அடுத்த கணம் திடிக்கிட்ட அண்ணாமலை சிரித்த முகத்துடன் செல்போனை தேடி எடுத்து வீசிய நபரிடம் ஒப்படைத்தார்.

செல்போன் அண்ணாமலை முகத்தில் பட்டதால் வேட்பாளர் திருமாறன் முகம் சட்டென மாறியது.உடனே அண்ணாமலை வேட்பாளரின் முதுகில் தட்டிக் கொடுத்து செல்போனை தூக்கி எறிந்த நபர் முன் அண்ணாமலை ஓகே என தம்ஸ் அப் காட்டினார்.இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசனை ஆதரித்து நேற்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது நல்லாம்பாளையம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து அவர் ஓட்டு சேகரித்தார். அப்பகுதியில் உள்ள சிப்ஸ் கடை ஒன்றில் அண்ணாமலை வாக்கு சேகரித்தார். அப்போது கடையில் இருந்த இயந்திரத்தை பயன்படுத்தி முறுக்கு பிழிந்தார். அவர் முறுக்கு சுட்டு ஓட்டு சேகரித்ததை பலரும் பாராட்டினார்கள்.

அண்ணாமலை நாளை தனது பிரச்சாரம் தொடர்பாக வெளியிட்ட பதிவில், "நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், ராசிபுரம், சேலம் வடக்கு மற்றும் தெற்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, நாளைய தினம் (13.04.2026), பொதுமக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.

திமுக ஆட்சியின் பொய்கள், ஊழல், சட்டம் ஒழுங்கு மற்றும் மக்கள் நலனில் தோல்வி உள்ளிட்ட தமிழகத்தின் அவலநிலைக்கு முடிவு கட்டும் நேரம் இது. பொதுமக்கள் அனைவரும், பெருந்திரளெனக் கூடி, ஆதரவளிக்க வேண்டுமென்று, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+