ஜஸ்ட் மிஸ்.. விபத்திலிருந்து தப்பிய சென்னை விமானம்! விமானி சாதுரியத்தால் உயிர் தப்பிய 165 பயணிகள்
சென்னை: சென்னையிலிருந்து டெல்லி செல்ல இருந்த பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதை உணர்ந்த விமானி, விமானத்தை இயக்காமல் தவிர்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
விஸ்தாரா நிறுவனம் உலகம் முழுவதும் சுமார் 61 விமானங்களை இயக்கி வருகிறது. பொதுவாக விமான நிறுவனங்கள் போயிங் அல்லது எர்பஸ் எனும் இரண்டு விமான தயாரிப்பு நிறுவனங்களில் ஏதேனும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் விமானத்தைதான் வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் விஸ்தாரா நிறுவனம் 46 ஏர்பஸ் ஏ320நியோ, 10 ஏர்பஸ் ஏ321, ஒரு போயிங் 737-800என்ஜி மற்றும் நான்கு போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானங்களை இயக்கி வருகிறது.

சர்வதேச விமான நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவுக்கு இந்த நிறுவனம் சிறப்பான விமான சேவையை வழங்கி வருகிறது. பிரிட்டனை சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ், விமான நிறுவனங்களின் செயல்பாட்டை ரிவ்யூ செய்து ஒவ்வொரு ஆண்டும் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் நடப்பாண்டின் சிறந்த சர்வதேச விமான சேவை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் விஸ்தாரா நிறுவனம் 19வது இடத்தை பிடித்திருக்கிறது. அதேபோல ஆசிய அளவில் 8வது இடத்தையும் பிடித்திருக்கிறது.
இந்நிலையில் இன்று காலை 6.55 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லிக்கு விஸ்தாரா நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட இருந்தது. திட்டமிட்டபடி பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக இருந்தது. ஆனால் விமானத்தை ரன்வேக்கு கொண்டு வந்த விமானிகள், இதில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து இந்த விமானத்தின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் விமானத்தில் இருந்த 165 பயணிகளும் இறக்கிவிடப்பட்டு, விமானத்தின் இயந்திர கோளாறு சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் பிரச்னை சரி செய்யப்பட்டன பின்னர் விமானம் பயணிகளுடன் சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டது. சரியான நேரத்திற்கு தொழில்நுட்ப கோளாறு குறித்து விமானிகள் கண்டுபிடித்து கூறியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் லேசான சலசலப்பை ஏற்படுத்தியது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications