சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னத்த சொல்ல.. நாம தான் குடம் குடமா தூக்கிட்டு தண்ணிக்கு அலையறோம் என்றால்.. நாயும் அலையுது!

நாய் ஒன்று குடத்துடன் தண்ணீர் தேடி அலைகிறது

Google Oneindia Tamil News

சென்னை: என்னத்த சொல்றது... நாம தான் குடம் குடமா தூக்கிட்டு தண்ணிக்கு அலையறோம் என்றால், நாய்கூட நாயா அலையுது.. தண்ணீர் பஞ்சம் இந்த நாயை கூட விட்டு வைக்கவில்லை!

போன வருஷம் தமிழகத்தில் அவ்வளவா மழை இல்லை.. அதிலும் சென்னை சுத்தம்.. எப்படியோ குடிநீர் பஞ்சம் வரப்போகிறது, வறட்சி வாட்ட போகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தார்கள். இருந்தாலும் என்ன பிரயோஜனம்?

சென்னைவாசிகள் உள்ளிட்ட தமிழக மக்கள் தண்ணி இல்லாமல் தவித்து வருகிறார்கள். தெருத்தெருவாக குடத்தை தூக்கி கொண்டு அலைகிறார்கள். ஒரு குடம் தண்ணியை விலைகொடுத்து வாங்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. அதனால் ஆங்காங்கே குடிநீர் கோரி மறியல், போராட்டம் என வெடித்து கிளம்பி வருகிறது.

தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கேட்ட என்சிபி பெண் தலைவரை காலால் எட்டி உதைத்த பாஜக எம்எல்ஏ-வீடியோ வைரல்தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கேட்ட என்சிபி பெண் தலைவரை காலால் எட்டி உதைத்த பாஜக எம்எல்ஏ-வீடியோ வைரல்

மதுரை

மதுரை

இப்போது ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் மதுரை மேலூரில் நடந்துள்ளது போல தெரிகிறது. அது ஒரு தெரு.. திடீரென்று ஏதோ சந்தில் இருந்து ஒரு நாய் வேகமாக ஓடிவருகிறது. அந்த நாய்க்கு தலையே இல்லை.. ஏன்னா.. தலைதான் குடத்துக்குள்ள மாட்டிக்கிட்டு இருக்கே!

பிளாஸ்டிக் குடம்

பிளாஸ்டிக் குடம்

அந்த நாய்க்கு தண்ணீர் தாகம் எடுத்திருக்கு. அங்கு ஒருபிளாஸ்டிக் குடம் கண்ணில் பட்டிருக்கு. ஆசை ஆசையாக ஓடிப்போய் பிளாஸ்டிக் குடத்துக்குள் தலையை விட்டு பார்த்தால், தண்ணியை காணோம். ஆனால், குடத்துக்குள்ளிருந்து தலையை அந்த நாயால் அதனால் வெளியே எடுக்கவே முடியவில்லை. அங்கும், இங்கும் ஓடுகிறது. கண்ணு தெரிந்து ஓடுகிறதா, தெரியாமல் ஓடுகிறதா என தெரியவில்லை.

விடுவிப்பு

விடுவிப்பு

இதை அங்கிருந்த சிலர் பார்த்ததும் குடத்தை அவிழ்த்து நாயை விடுவிக்க முயற்சிக்கிறார்கள். ஆனாலும் நாய் குப்பை மேட்டு பக்கம் ஓடுகிறது. ஆனாலும் ரெண்டு, மூணு பேர் அந்த நாயை பிடித்து நிற்க வைத்து, குடத்தை ஒருத்தர் இழுக்க, நாயின் உடலை ஒருத்தர் பிடித்து கொள்ளவும்தான் தலை விடுவிக்கப்படுகிறது. இப்போதுதான் நாய்க்கு மூச்சே வருகிறது.

வீடியோ

தெரியாமல் குடத்துக்குள் தலையை நாய் விட்டிருந்தாலும், இதனை பார்ப்பதற்கு தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தண்ணீருக்காக அலைவது போல பரிதாபமாகவே இருக்கு!

English summary
Near Madurai, The dog's head got tangled into the plastic Water Pot and did not even leave
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X