நாடு முழுவதும் களைகட்டிய ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்கள்.. தலைவர்கள் வாழ்த்து! வங்கிகளுக்கு விடுமுறை
சென்னை: நாடு முழுவதும் இன்று ரக்ஷா பந்தன் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சகோதரத்துவத்தை கொண்டாடும் விழாவாக இது கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த விழாவுக்கு பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளை கூறியுள்ளனர்.
இந்த சமூகம் என்பது சகோதரத்துவத்தையும் அன்பையும் உள்ளடக்கியது என்பதை வலியுறுத்தும் விதமாக ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாம் யார் கைகளில் கயிற்றை கட்டுகிறோமோ அவர்களை காலம் முழுவதும் சகோதர/சகோதரிகளாக பாவித்து அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுப்பதை உறுதி செய்ய வேண்டும். நாடு முழுவதும் இந்த விழா கொண்டாடப்படும் என்று சொன்னாலும் கூட வட மாநிலங்களில் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில்தான் இது அதிகமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இந்த பண்டிகையை சிறப்பிக்கும் விதத்தில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.200 குறைக்கப்படுகிறது என்கிற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளையும் கூறியுள்ளனர். "ரக்ஷா பந்தன் பண்டிகை நம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நாளாகும். கேஸ் சிலிண்டரின் விலை குறைப்பு எனது குடும்பத்தில் உள்ள சகோதரிகளின் வசதியை அதிகரித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும். என்னுடைய ஒவ்வொரு சகோதரியும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், இதுவே என் விருப்பம்" என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் காரணமாக வட மாநிலங்களில் ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வங்கிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதியான நாளை வங்கிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications