ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியுள்ளன.. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,219 மையங்களில் சுமார் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் தேர்வெழுதி வரும் நிலையில், சென்னை மடிப்பாக்கத்தில் நடந்த ஒரு நிகழ்வு அனைவரது கண்களையும் குளமாக்கியுள்ளது.. என்ன நடந்தது?
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் உள்ள பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருபவர் 15 வயது சிறுவன் சாய் கார்த்திக்.. வழக்கமான துடிப்புடன் பள்ளிக்கு சென்று வந்த இந்த மாணவனின் வாழ்வில் எதிர்பாராத ஒரு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி விட்டது..

ஆம், தன்னுடைய வீட்டின் மாடியில் இருந்து கீழே இறங்கும்போது நிலைதடுமாறி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த சாய் கார்த்திக்கிற்கு, முதுகெலும்பில் அதாவது பைனல் கார்டில் பலத்த காயம் ஏற்பட்டது.. இந்த விபத்தின் காரணமாக அவரால் எழுந்து உட்காரவோ அல்லது நடக்கவோ முடியாத சூழல் உருவானது..
டாக்டர்களின் தீவிர சிகிச்சையில் இருந்தபோதிலும், நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாகவே இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் மாணவர்..
சென்னை 10ம் வகுப்பு மாணவன்
இந்த நேரத்தில்தான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கிவிட்டது.. வாழ்க்கையின் மிக முக்கியமான தேர்வு நடைபெற உள்ள நிலையில், உடல்நிலை ஒத்துழைக்காதது அந்த மாணவனையும் அவரது குடும்பத்தினரையும் மிகுந்த கவலையில் ஆழ்த்தியது.. இருந்தாலும், தனது ஓராண்டு உழைப்பு வீணாகிவிடக்கூடாது என்பதில் சாய் கார்த்திக் உறுதியாக இருந்தார்..
படுத்த படுக்கையாக இருந்தாலும் தேர்வினை எழுதியே தீருவேன் என்ற அவரது தன்னம்பிக்கை, பள்ளிக்கல்வித்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.. மாணவனின் நிலையை கருத்தில் கொண்டு, அவர் ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு மையத்திற்கு வந்து தேர்வ எழுத பள்ளிக்கல்வித்துறை சிறப்பு அனுமதியை வழங்கியது..
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடியே
இன்று காலை தமிழ் பாடத்திற்கான முதல் தேர்வு தொடங்கியபோது, மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது.. அங்கிருந்து ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்கப்பட்ட நிலையில் சாய் கார்த்திக் தேர்வு ரூமுக்குள் கொண்டு வரப்பட்டார்..
முதுகெலும்பு பாதிப்பால் அவரால் பேனாவைப் பிடித்து எழுத முடியாத நிலை இருந்ததால், அவருக்கு உதவியாக வேறொரு பள்ளியில் இருந்து ஒரு ஆசிரியை வரவழைக்கப்பட்டிருந்தார்.. தேர்வு அறையில் படுத்தபடியே சாய் கார்த்திக் விடைகளைச் சொல்லச் சொல்ல, அந்த ஆசிரியை அதனை விடைத்தாளில் எழுதினார்.. வலியை பொறுத்துக்கொண்டு கல்வியின் மேன்மையை உலகுக்கு உணர்த்திய அந்த மாணவனின் செயல் அங்கிருந்த ஆசிரியர்களையும் சக மாணவர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
விடாமுயற்சி - சபாஷ்
தமிழகம் முழுவதும் இன்று 9,09,002 பேர் தேர்வு எழுதி வரும் நிலையில், 25,801 தனித்தேர்வர்களும் 395 சிறைக்கைதிகளும் இந்த பட்டியலில் அடங்குவர்.. இவர்களுக்கிடையில், மரண வலியைத் தாங்கிக்கொண்டு ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சாய் கார்த்திக் காட்டிய இந்த உறுதி, எத்தகைய சவால்களையும் தன்னம்பிக்கையால் வெல்ல முடியும் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது..
உடல்நலம் குன்றிய நிலையிலும், கல்வியின் மீது கொண்ட தீராத தாகத்தால் ஒரு மாணவர் காட்டிய மன உறுதி, இன்றைய தேர்வு நாளின் மிக முக்கியமான செய்தியாக மாறியுள்ளது.. அதுமட்டுமல்ல, மே 20-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், சாய் கார்த்திக்கின் இந்த விடாமுயற்சிக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்..!!!
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications