Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் திறப்பு தள்ளிப்போகிறது.. ஸ்டாலினின் திட்டம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் கட்டும் பணி இன்னமும் முடியாத காரணத்தால் திறப்பு விழா மேலும் இரண்டு மாதங்களுக்கு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி வயது முதிர்வினால் காலமானார். தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு சென்னை மெரீனாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்,

The inauguration of Karunanidhis memorial is postponed : What is Stalins plan?

விதிஎண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசும் போது, கலைஞர் ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப்படங்களுடன் சென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்றார்.

அதன்படியே சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணிகள் நடந்தது.

அவரது சாதனைகள், சிந்தனைகளை அடுத்த தலைமுறை அறியும் வகையில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்ததன் அடையாளமாக உதயசூரியன் போன்று முகப்பில் கருணாநிதி நினைவிடத்தில் 3 வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் ஆகியவையும் அமைகிறது. முன்னதாக கலைஞர் கருணாநிதி நினைவிடத்தை அவரது நினைவு நாளான ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி திறக்க முதலில் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டார்.

ஆனால் வேலைகள் முடிவடையாததால் திறப்பு தள்ளி போனது. அதன் பிறகு இந்த மாதம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந்தேதி திறக்கலாமா? என்றும் ஆலோசித்தார்கள். ஆனாலும் பல்வேறு பணிகள் முடிவடையாத காரணத்தால் அந்த தேதியும் தள்ளிப்போயுள்ளது.

ஏனெனில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 15 தேதி அன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதனால் இன்னும் 2 மாதங்கள் கழித்தே கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+