கிராமப்புற இளைஞர்கள் டாக்டர்கள் ஆக கூடாது என்பதே மோடி அரசின் திட்டம்.! முத்தரசன் தாக்கு
சென்னை: மருத்துவ படிப்பில் சேர கட்டாயமாக்கப்பட்டுள்ள நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க கொண்டு வரப்பட்ட இரு சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்பட்டு வரும் நீட் நுழைவுத் தேர்வில் வினாக்கள், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கேட்கப்பட்டு வருகிறது. இதனால் மாநில பாடத்திட்டத்தில் படித்து மருத்துவராக நினைக்கும் ஏழை மாணவர்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

தமிழகத்தில் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு மருத்துவராக முடியாத விரக்தியில் உயிர் நீத்தார் அனிதா. அவர் உயிரிழப்பதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பலமான எதிர்ப்பு எழுந்தது. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத மத்திய அரசு நீட் தேர்வை தமிழகத்திலும் கட்டாயமாக்கியது.
இதன் விளைவாக அனிதாவை தொடர்ந்து கடந்த இரு வருடங்களாக ஏராளமான மாணவ மாணவிகள் தங்களது இன்னுயிரை மாய்த்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க கோரி, ஒருமனதாக இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு. இந்நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரியது தொடர்பான தமிழக அரசின் இரு சட்டமசோதாக்களை நிராகரித்து விட்டதாக, மத்திய அரசு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த தமிழக அரசின் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது மத்திய அரசு.
இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முத்தரசன், தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாக்களை மத்திய அரசு அலட்சியப்படுத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. கிராமப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மருத்துவர்கள் ஆகிவிட கூடாது என்பதே பாஜக அரசின் திட்டமாக உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதே போல நீட் விலக்கு மசோதாக்களை நிராகரித்த மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை அவமானப்படுத்தும் நோக்கில் பாஜக அரசு நடந்து வருவதாக கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை சிதைத்து அவர்களை முற்றிலும் நிராகரிக்கிறது மத்திய அரசு என கடுமையாக சாடியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications