தேசியக் கொடி என்றால் சும்மா கிடையாது! அதற்கென்று தனி மரியாதை உண்டு! ஈஸ்வரன் வேண்டுகோள்!
சென்னை: ஆகஸ்ட் 15 அன்று ஏற்றப்பட்ட தேசிய கொடிகள் பல இடங்களில் கிழிந்தும், மோசமான நிலையிலும் இருப்பதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
தேசியக் கொடியை பறக்க விடுவது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் அதை திரும்ப எடுத்து மரியாதையோடு வைப்பது என அவர் குறிப்பிட்டுள்ளார்
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

சுதந்திர தினம்
இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று அனைவரும் வீடுகளில் கொடியேற்ற வேண்டுமென்று பாரத பிரதமர் அவர்கள் அறிக்கை விட்டார். தேசிய உணர்வும், விடுதலை வேட்கையும், சுதந்திர தின மகிழ்ச்சியும் எப்போதும் எல்லோருக்கும் மனதில் இருந்தாலும் பல இடங்களில் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன.

கட்சி கொடிகள்
வீடுகளில் மட்டுமில்லாமல் பல பொது இடங்களிலும் கட்சி கொடிகள் போல பறக்க விடப்பட்டன. பெரும்பாலான இடங்களில் கட்டப்பட்ட தேசிய கொடிகள் இறக்கப்படவில்லை. பல இடங்களில் யாரும் கண்டு கொள்ளாமல் கிழிந்து போய் கிடப்பதும், சேற்றிலே கிடப்பதும் பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது.

தேசியக் கொடி
இந்திய தேசத்தினுடைய தேசியக் கொடியை பறக்க விடுவது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் அதை திரும்ப எடுத்து மரியாதையோடு வைப்பது. தேசியக்கொடிக்கு உரிய மரியாதையை கொடுப்பதற்காகத்தான் எல்லா இடங்களிலும் எப்போதும் கட்டி பறக்க விடுவதற்கு அனுமதி கொடுப்பது கிடையாது.

அலங்கோலமாக
இன்னும் தொடர்ந்து பல இடங்களில் தேசியக்கொடி அவமதிக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அரசாங்கமும், அதிகாரிகளும் உரிய கவனத்தை செலுத்தி தக்க உத்தரவுகளை பிறப்பித்து அலங்கோலமாக ஆங்காங்கே கிடக்கின்ற தேசிய கொடிகளை உடனடியாக எடுத்து பாதுகாக்க வேண்டும்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications