மலை ரயில் ரத்து.. களையிழந்த உதகை.. ஆனா இவங்கெல்லாம் ஊட்டிக்கு போகலாமாம்.. யாருனு தெரியுமா?
சென்னை: நீலகிரி மாவட்டத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாளை முதல் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. வார இறுதி நாள் ஊரடங்கும் போடப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.

இதுபோக தமிழகத்தின் கொடைக்கானல், கன்னியாகுமரி, ஊட்டி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், முதுமலை புலிகள் காப்பகம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகியவை மூடப்பட்டுள்ளன.
முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளின் அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக இருக்கும் ஊட்டி களையிழந்து காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் வருகை தர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் நாளை முதல் நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகைக் குறைவு காரணமாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் உதகையில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் இரவு10 மணிக்குள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதே வேளையில் ஊட்டியில் இருந்து தினமும் கோவைக்கு வேலைக்கு சென்று வருபவர்கள், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்கள், மருத்துவ பணிகளில் ஈடுபடுபவர்கள் இதற்கான அனுமதி பெற்று ஊட்டிக்கு சென்று வரலாம் என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications