Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூந்தமல்லி டூ கிண்டிக்கு விரைவில் நல்ல செய்தி.. முகலிவாக்கத்தில் ஈரடுக்கு மெட்ரோ.. பணிகள் விறுவிறு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை முகலிவாக்கத்தில் ஈரடுக்கு மெட்ரோ ரயில் பாதை பணிகள் அமைக்கப்படுகிறது. இது மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் (வழித்தடம்-5) வருகிறது. அதில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதால், போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. ஈச்சங்காடு மற்றும் வெள்ளக்கால் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித் தடங்களில் 116.1 கிலோ மீட்டர் தொலைவில் செயல்படுத்தப்படுகிறது. வழித்தடம்-3 மாதவரம் முதல் சிப்காட் வரை (45.8 கி. மீ), வழித்தடம்-4 கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை (26.1 கி. மீ), வழித்தடம்-5 மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை (47 கி. மீ) செயல்படுத்தப்படுகிறது. 63 ஆயிரத்து 246 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது

The plan is to complete the double-decker metro rail line project in Mugalivakkam by 2028

உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் சிப்காட் வரை 45.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும் 3-வது வழித்தடத்தை பொறுத்தவரை, 19 கிலோ மீட்டர் மேம்பாலத்திலும், 26.4 கிலோ மீட்டர் பாதை பூமிக்கு அடியிலும் செல்கிறது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 49 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. வருகிற 2028-ம் ஆண்டின் இறுதியில் திட்டத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருகிறது. இதில் சில பகுதிகள் நடப்பாண்டு செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை முகலிவாக்கத்தில் ஈரடுக்கு மெட்ரோ ரயில் பாதை பணிகள் அமைக்கப்படுகிறது. இது மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் (வழித்தடம்-5) வருகிறது. அதில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதால், போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. ஈச்சங்காடு மற்றும் வெள்ளக்கால் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 2028-ம் ஆண்டுக்குள் இந்த பணியை முடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

அதேபோல் மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ள சில பகுதிகளில், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் மற்றும் ரயில் பாதை அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அத்துடன் மவுண்ட் பூந்தமல்லி சாலையிலும் மெட்ரோ பணிகள் வேகமெடுத்துள்ளது. அதேபோல், திருமங்கலம் சிக்னல் அருகில் ரயில் நிலையம் அமைக்க பழைய கட்டிடங்களை இடித்து நிலம் கையப்படுத்தப்படும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

அங்கு பணிகள் நடக்கும் பகுதிகளில் சாலை விரிவாக்கம் மற்றும் பாலங்கள் இடிப்பு போன்ற காரணங்களால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருமங்கலம் சிக்னல் அருகில் பணிகள் முடிந்தால் மக்கள் மிகப்பெரிய அளவில் பயனடைவார்கள். இது ஒருபுறம் எனில் வடபழனி பூந்தமல்லி இடையே மெட்ரோ சேவையை கொண்டுவருதில் மெட்ரோ அதிக ஆர்வம் காட்டி வருகிறது. வரும் பிப்வரிக்குள் பூந்தமல்லியில் இருந்து வடபழனிக்கு மெட்ரோ ரயிலில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+