பூந்தமல்லி டூ கிண்டிக்கு விரைவில் நல்ல செய்தி.. முகலிவாக்கத்தில் ஈரடுக்கு மெட்ரோ.. பணிகள் விறுவிறு
சென்னை: சென்னை முகலிவாக்கத்தில் ஈரடுக்கு மெட்ரோ ரயில் பாதை பணிகள் அமைக்கப்படுகிறது. இது மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் (வழித்தடம்-5) வருகிறது. அதில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதால், போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. ஈச்சங்காடு மற்றும் வெள்ளக்கால் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித் தடங்களில் 116.1 கிலோ மீட்டர் தொலைவில் செயல்படுத்தப்படுகிறது. வழித்தடம்-3 மாதவரம் முதல் சிப்காட் வரை (45.8 கி. மீ), வழித்தடம்-4 கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை (26.1 கி. மீ), வழித்தடம்-5 மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை (47 கி. மீ) செயல்படுத்தப்படுகிறது. 63 ஆயிரத்து 246 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது

உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் சிப்காட் வரை 45.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும் 3-வது வழித்தடத்தை பொறுத்தவரை, 19 கிலோ மீட்டர் மேம்பாலத்திலும், 26.4 கிலோ மீட்டர் பாதை பூமிக்கு அடியிலும் செல்கிறது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 49 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. வருகிற 2028-ம் ஆண்டின் இறுதியில் திட்டத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருகிறது. இதில் சில பகுதிகள் நடப்பாண்டு செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை முகலிவாக்கத்தில் ஈரடுக்கு மெட்ரோ ரயில் பாதை பணிகள் அமைக்கப்படுகிறது. இது மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் (வழித்தடம்-5) வருகிறது. அதில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதால், போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. ஈச்சங்காடு மற்றும் வெள்ளக்கால் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 2028-ம் ஆண்டுக்குள் இந்த பணியை முடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
அதேபோல் மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ள சில பகுதிகளில், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் மற்றும் ரயில் பாதை அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அத்துடன் மவுண்ட் பூந்தமல்லி சாலையிலும் மெட்ரோ பணிகள் வேகமெடுத்துள்ளது. அதேபோல், திருமங்கலம் சிக்னல் அருகில் ரயில் நிலையம் அமைக்க பழைய கட்டிடங்களை இடித்து நிலம் கையப்படுத்தப்படும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அங்கு பணிகள் நடக்கும் பகுதிகளில் சாலை விரிவாக்கம் மற்றும் பாலங்கள் இடிப்பு போன்ற காரணங்களால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருமங்கலம் சிக்னல் அருகில் பணிகள் முடிந்தால் மக்கள் மிகப்பெரிய அளவில் பயனடைவார்கள். இது ஒருபுறம் எனில் வடபழனி பூந்தமல்லி இடையே மெட்ரோ சேவையை கொண்டுவருதில் மெட்ரோ அதிக ஆர்வம் காட்டி வருகிறது. வரும் பிப்வரிக்குள் பூந்தமல்லியில் இருந்து வடபழனிக்கு மெட்ரோ ரயிலில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications