சட்டசபையில் இன்று 5 முக்கிய குழுக்களின் அறிக்கைகள் தாக்கல்! இன்றைய நிகழ்வுகளின் விவரம்!
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் சட்டசபையில் இன்று 5 முக்கிய குழுக்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
பொதுக்கணக்கு குழு, பொது நிறுவனங்கள் குழு, சட்டவிதிகள் ஆய்வுக் குழு, அரசு உறுதிமொழிக் குழு, மநுக்கள் குழு, என 5 குழுக்களின் அறிக்கைகளையும் அதன் தலைவர்கள் சட்டசபையில் தாக்கல் செய்கிறார்கள்.
இதனிடையே ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து திமுக சட்டமன்ற உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் பேசுகிறார்.

இது தொடர்பான விவரம் வருமாறு;
(1) பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கைகள் அளித்தல்
திரு. கு. செல்வபெருந்தகை, பொதுக் கணக்குக் குழுத் தலைவர், 2021-2023-ஆம் ஆண்டிற்கான மேற்படி குழுவின் ஐம்பத்து ஒன்பதாவது முதல் எண்பத்து ஒன்றாவது வரையிலான (பதினாறாவது சட்டமன்றப் பேரவை) அறிக்கைகளை அளிப்பார்.
(2) பொது நிறுவனங்கள் குழுவின் அறிக்கைகள் அளித்தல்
திரு. S.R. இராஜா, பொது நிறுவனங்கள் குழுத் தலைவர், 2021-2023-ஆம் ஆண்டிற்கான மேற்படி குழுவின் முப்பத்து நான்காவது முதல் முப்பத்து ஒன்பதாவது வரையிலான (பதினாறாவது சட்டமன்றப் பேரவை) அறிக்கைகளை அளிப்பார்.
(3) சட்ட விதிகள் ஆய்வுக் குழுவின் அறிக்கைகள் அளித்தல்
திரு. இரா. இராஜேந்திரன், சட்ட விதிகள் ஆய்வுக் குழுத் தலைவர், 2021-2023-ஆம் ஆண்டிற்கான மேற்படி குழுவின் ஐந்தாவது மற்றும் ஆறாவது (பதினாறாவது சட்டமன்றப் பேரவை) அறிக்கைகளை அளிப்பார்.
(4) அரசு உறுதிமொழிக் குழுவின் அறிக்கைகள் அளித்தல்
திரு. தா. உதயசூரியன்,அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர், 2021-2023-ஆம் ஆண்டிற்கான மேற்படி குழுவின் ஒன்பதாவது முதல் முப்பத்து மூன்றாவது வரையிலான (பதினாறாவது சட்டமன்றப் பேரவை) அறிக்கைகளை அளிப்பார்.
(5) மனுக்கள் குழுவின் அறிக்கைகள் அளித்தல்
முனைவர் கோவி. செழியன், மனுக்கள் குழுத் தலைவர், 2021-2023-ஆம் ஆண்டிற்கான மேற்படி குழுவின் பதின்மூன்றாவது முதல் இருபதாவது வரையிலான (பதினாறாவது சட்டமன்றப் பேரவை) அறிக்கைகளை அளிப்பார்.












Click it and Unblock the Notifications