Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு எங்களுக்கு கடன் பட்டிருக்கிறது! ஸ்டிரைக் நிச்சயம் நடக்கும்..போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 8 ஆண்டுகளுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். வேலை நிறுத்தத்திற்கு எதிராக தமிழக அரசு இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதால், வேலை நிறுத்தம் நிச்சயம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டில் போக்குவரத்து கழகத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன. குறிப்பாக கடந்த காலங்களில் தீபாவளி, ஆயுதபூஜை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை நாட்களில் இவர்களின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கதாக இருந்திருக்கிறது. ஆனால், போதுமான ஊழியர்கள் இல்லாததால் பணிச்சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, புதியதாக வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட வேண்டும் என்று ஊழியர்கள் போராடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வேலை நிறுத்த போராட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.

The strike has been confirmed after tripartite talks with the transport union failed

இது குறித்து போக்குவரத்து சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில், "போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் 1,30,000 தொழிலாளர்களுக்கு கடந்த 01.09.2023 அன்று முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை இதுவரை தமிழ்நாடு அரசு தொடங்கவில்லை. மேலும், கடந்த 2015 ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள 90,000 ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியும் இதுவரை அரசால் வழங்கப்படவில்லை.

இதர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை என்பதோடு, பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுவதும் அண்மைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, காலியாகவுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களும் நிரப்பப்படாததோடு, பேருந்து சேவைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், மகளிருக்கான இலவசப் பேருந்து சேவையால் போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படும் நட்டத்தையும் தமிழ்நாடு அரசு ஈடுசெய்வதில்லை. போக்குவரத்து தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியும் அரசால் செலவிடப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டு நிலுவையிலுள்ள அகவிலைப்படி உயர்வைக் கணக்கிட்டு முழுமையாக வழங்குவோம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்றெல்லாம் திமுக தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. ஆனால் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பின்னர் இவை நிறைவேற்றப்படவில்லை. இப்படியாக 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

எனவே இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து சங்கங்கள் நாளை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசுடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

The strike has been confirmed after tripartite talks with the transport union failed

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தரராஜன் கூறுகையில், "6 அம்ச கோரிக்கைகளில் எதையும் இப்போது ஏற்க இயலாது என அரசு பதிலளித்துள்ளது. இது நியாயமற்ற பதில், போக்குவரத்து துறை தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. அரசு கடந்த 8 ஆண்டுகளாக எங்களுக்கு கடன்பட்டிருக்கிறது. எங்களை அரசு இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது. எனவே எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாதவரை பேருந்துகள் இயக்கப்படாது" என்று கூறியுள்ளார்.

ஆனால், தொ.மு.ச உள்ளிட்ட தொழிற்சங்கங்களை கொண்டு வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+