Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளிர் நல திட்​டங்கள், கடன் உதவிகள், நல திட்ட உதவிகள்.. தமிழக அரசு வெளியிட்ட குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் வாழ்​வா​தாரம் தொடர்பான வாய்ப்பு​கள், நலத்​திட்​டங்​கள், நல உதவிகள் குறித்த வழிகாட்டு​தல்களை பெறவும், தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனத்​தின் திட்​டங்கள் குறித்து ஆலோசனைகள் மற்றும் புகார்கள் தெரிவிக்​க​வும் வாழ்​வாதார உதவி அழைப்பு எண் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக அரசின் சார்​பில் தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனத்​தின்​கீழ் தமிழ்​நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்​வாதார இயக்​ககங்கள் மற்றும் வாழ்ந்து காட்டு​வோம் திட்டம் மூலம் பல்வேறு நலத்​திட்​டங்கள் மகளிருக்காக செயல்​படுத்​தப்​பட்டு வருகின்றன. அதில் பால்வள மையம், மாதவிடாய் சுகாதார மேலாண்மை மன்றங்கள், அறிவுசார் மையங்கள் மூலம் அளிக்​கப்​படும் பயிற்சிகள், சமுதாய பண்ணைப் பள்ளி​கள், சமுதாய திறன் பள்ளிகள் மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

tn govt notification government women

அதேபோல் மகளிர் சுய உதவி குழுக்​களுக்கு வழங்​கப்​படும் கடனுதவி​கள், நகர்ப்புற இளைஞர்​களுக்காக மத்திய அரசின் கிராமப்புற மேம்​பாட்டு அமைச்​சகத்​தின்​கீழ் தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்​டம், வேலை​வாய்ப்பு முகாம்​கள், இளைஞர் திறன் விழாக்கள் போன்ற​வை​யும் தமிழக அரசால் நடைமுறைப்​படுத்​தப்​பட்டு வருகின்றன.

அந்த வகை​யில் மகளிர் வாழ்​வா​தாரம் தொடர்பான வாய்ப்பு​கள், நலத்​திட்​டங்​கள், நல உதவிகள் குறித்த வழிகாட்டு​தல்களை பெறவும், தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனத்​தின் திட்​டங்கள் குறித்து ஆலோசனைகள் மற்றும் புகார்களை தெரிவிக்​க​வும் வாழ்​வாதார உதவி அழைப்பு எண் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி பொது அலுவலக வேலை நாட்​களில் காலை 9.30 முதல் மாலை 6.30 மணி வரையில் 155330 என்ற எண்ணை தொடர்பு ​கொண்டு ஆலோசனைகளை பெற்றுக்​கொள்​ளலாம்​." இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், "தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் மூலம் 11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சி வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மகளிர் சுய உதவிக் குழு​வினர்களுக்கு நிதி கல்வியறிவை மேம்படுத்​துதல், வங்கி சேமிப்பு கணக்கை தொடங்​குதல், வங்கி கடன் பெறு​வதற்கான வழிவகைகள், காப்​பீடு, ஓய்வூதிய சேவைகள் போன்ற நிதி சேவைகளை வழங்​கு​வதற்காக தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் மூலம் நிதிசார் கல்வி திட்டம் தொடங்​கப்​பட்​டது. நிதிசார் கல்வி​யானது மகளிர் சுய உதவிக்​குழு உறுப்​பினர்​களுக்​கும், ஏழை மற்றும் பாதிக்​கப்​படக் கூடிய நிலை​யில் உள்ள குடும்பத்​தினருக்​கும் நிதி சார்ந்த விழிப்பு​ணர்வை வழங்​குவதை நோக்​க​மாகக் கொண்​டுள்​ளது.

நிதிசார் திறனை வளர்ப்​பது, திட்ட மானி​யங்​கள், வட்டி மானி​யம், வங்கி கடன் என பல்வேறு நிதி சேவைகளை சுய உதவிக் குழு உறுப்​பினர்கள் எளிதில் அணுகு​வதற்கு இத்திட்டம் வழிவகை செய்​கிறது. இதற்காக சிறப்பு முகாம்​களும் நடத்​தப்​படு​கின்றன. அந்த வகை​யில் மகளிர் சுய உதவிக்​குழு உறுப்​பினர்கள் நிதி சார்ந்த விழிப்பு​ணர்வை பெறும் வகையில் 11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி குறித்த பயிற்சிகளை வழங்க ரூ.4.50 கோடி நிதியை தமிழக அரசு மூலம் ஒதுக்​கீடு செய்யப்பட்டுள்​ளது.

அதன்படி இதுவரை மொத்தம் 2.33 லட்சம் சுய உதவிக் குழு மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சிகள் அளிக்​கப்​பட்​டுள்ளன. மீதமுள்ள மகளிருக்​கும் வரும் டிச.31-ம் தேதிக்​குள் பயிற்சிகளை நிறைவு செய்​யு​மாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் அறிவுறுத்​தி​யுள்​ளார். அதற்கான பணி​கள் தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் சார்​பில் ​முன்னெடுக்​கப்​பட்டு வரு​கின்​றன"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+