தமிழக கல்லூரிகளில் மாணவர் காங்கிரஸ் அமைப்பு! கட்சி வளர்ச்சிப் பணிகளில் திடீர் விறுவிறு!
சென்னை: தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர் காங்கிரஸ் அமைப்பை நிறுவும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்காக மண்டலம் வாரியாக பொறுப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர்களை கடந்த 4ஆம் தேதி டெல்லிக்கு அழைத்துப் பேசி மல்லிகார்ஜுனே கார்கே, ராகுல், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் தமிழகத்தில் காங்கிரஸின் நிலைமை குறித்து மிகுந்த அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். அண்ணாமலை வருகைக்கு பிறகு பாஜக துடிப்புடன் செயல்படுவதை சுட்டிக்காட்டிய அவர்கள் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கான பணிகளில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினர்.

இந்நிலையில் தான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி மாற்றம் என்ற தகவல் கடந்த வாரம் முழுவதும் றெக்கை கட்டை பறந்தது. கே.எஸ்.அழகிரி இடத்தை பிடிக்கப்போவது செல்வப்பெருந்தகையா, ஜோதிமணியா, சசிகாந்த் செந்திலா என விவாதங்கள் எழுந்தன. இந்தச் சூழலில் தமிழகத்தில் மாணவர் காங்கிரஸை வலிமைப்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார் அதன் தலைவர் சின்னத்தம்பி.
சென்னை, திருவளூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர், கோவை,திருச்சி, மதுரை, தஞ்சை, கன்னியாகுமரி, திண்டுக்கல் என 11 மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்துள்ள சின்னத்தம்பி, கல்லூரிகளில் மாணவர்களை சந்தித்துப் பேசி மாணவர் காங்கிரஸ் அமைப்பை வலிமைப்படுத்தும் பணிகளை ஒப்படைத்துள்ளார்.
தமிழக மாணவர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக உள்ள சின்னத்தம்பியை பொறுத்தவரை மாணிக்கம்தாகூர் எம்.பி.யின் ஆதரவாளராவார். இந்த யோசனைக் கூட மாணிக்கம் தாகூர் கொடுத்ததாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications